<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-6680909</id><updated>2011-04-22T00:05:50.956+05:30</updated><title type='text'>மகரந்தம்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://magarantham.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6680909/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://magarantham.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>மகரந்தம்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://img75.photobucket.com/albums/v228/magaranthampicts/magarantham.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>18</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-6680909.post-114474567734436771</id><published>2006-04-11T14:23:00.000+05:30</published><updated>2006-04-11T14:24:37.346+05:30</updated><title type='text'>உடற்கல்வி ஆசிரியர்கள் - சீமாச்சு</title><content type='html'>பள்ளியில் படிக்குங் காலத்தில் நான் சினேகமாகப் பழக முடியாத ஒரு தரப்பு ஆசிரியர்கள் உண்டென்றால் அது உடற்பயிற்சி ஆசிரியர்கள்(பி.டி சார்) தான். எல்லா நாட்களிலும், காலை 9:30 மணிக்கு, பள்ளி முதல் மணி அடித்த உடனேயே பள்ளியின் பிரதான வாயிலில் மீசையை முறுக்கிக் கொண்டு இந்த பி.டி சார்கள் தான் நிற்பார்கள். யார் லேட்டாக வந்தாலும் ஒரு மிரட்டலுடன், சமயத்தில் பிரம்படியுடன் உபசரிப்பு நடக்கும். எனக்கு இவர்களைக் கண்டாலே ஒரு விதமான பயம். கூடுமான வரை இவர்கள் எந்த பக்கம் தென்பட்டாலும் அவர்கள் கண்ணில் படாமல் சுற்றிச் சென்றுவிடுவேன். இப்பொழுதும் நான் படித்த பள்ளிகளுக்குச் சென்றால் 'நீ இந்தப் பள்ளோடத்துலயா படிச்சே' என்று அப்பாவியாகக் கேட்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமாக இரண்டு பி.டி கிளாஸ்கள் வாரத்தில் இருக்கும். ஒன்று வகுப்பறையில் ஒன்று க்ரெளண்டில். எப்படியாவது இரண்டுக்கும் மட்டம் போட்டு விடுவது வழக்கம். எந்த ஓட்டப் பந்தயத்திலும் கலந்து கொண்டது கிடையாது. எந்த பி.டி வகுப்பாய் இருந்தாலும் எண்ணை வழிய முகத்தை வைத்துக் கொண்டு 'ரொம்ப தலை வலி சார்' 'ராத்திரி முழுக்க ஒரே ஜுரம் சார்' என்று ஏதாவது ஒரு காரணம் சொல்லி விட்டு ஜூட். சமயங்களில் லயனில் எல்லோருடனும் உட்காரச் சொல்லி விடுவார். முடிந்தவரை கடைசி ஆளாக உட்கார்ந்து கொண்டு, மடியில் 'கொழும்பு ஸ்டோர்' சாயம் போன மஞ்சள் பையில் உள்ள புத்தக மூட்டையை மடியில் வைத்துக் கொண்டு, க்ரெளண்டில் மிச்சம் மீதியிருக்கிற காஞ்ச புல்லைப் புடுங்கிக் கொண்டு, குனிந்து கொண்டே அடுத்தவன் கைககடியாரத்தில் மணிபார்த்துக் கொண்டு இருப்பது தான் வேலை.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் பள்ளியில் உடற்பயிற்சி ஆண்டு விழா நடக்கும் போது க்ரெளண்டே ஜேஜேன்னு இருக்கும். அப்ப மட்டும் தலையைக் காட்டி விடுவது வழக்கம். வருடம் முழுக்க சரியாகப் படிக்காத்தற்காக எல்லா வாத்தியாருங்க கிட்டேயும் திட்டு வாங்கும் கடைசி பெஞ்சு மாணவர்களுக்கு, அன்று கொண்டாட்டம் தான். ஏதாவது ஒரு பரிசு வாங்கி வந்து வகுப்பாசிரியரிடம் நல்ல பெயர் எடுத்து விடுவார்கள். நமக்குத் தான் ஒரு விளையாட்டும் புரியாதே. யார் ஜெயிச்சா-னு தெரியறதே அந்த 1-2-3 டப்பாவில் ஏறும் போது தான் புடி படும். நாமளும் என்றைக்காவது அந்த 1-2-3 டப்பாவில் ஏறிப் பார்த்து விடவேண்டும் என்று ஒரு கனவு இருந்ததென்னவோ உண்மைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் பி.டி மாஸ்டர் ரூமில் அந்த டப்பா தனியாகக் கெடக்கும் போது ஒரு 2 நிமிடம் அதில் ஏறி நின்று பார்த்து விட்டேன். நல்லவேளை பி.டி சாரிடம் மாட்டிக் கொள்ளவில்லை.பள்ளி விட்டு கல்லூரி வந்தவுடன், இந்த தொந்தரவு எல்லாம் இல்லை. மீசை முறுக்கும் பிடி மாஸ்டருக்கும் நமக்கும் சம்பந்தம் கிடையாது. கல்லூரி வாழ்க்கையில் 5 வருடமும் (BS and MS) அவரிடம் ஒரு தடவை கூட பேசியது கூட கிடையாது. இவ்வளவு தூரம் இந்த ஆசிரியர்களை விட்டு ஓடியதன் காரணமோ என்னவோ எல்லாவற்றிற்கும் சேர்த்து ஈடு கட்ட வந்தது ஒரு வாழ்க்கை. நான் MSc படிக்கும் போதிலிருந்து 11 வருடங்கள் காதலித்து சூழ்நிலை சூழ்ச்சிகளால், மணக்க முடியாமல் போன என் அன்பிற்கினிய முதல் காதலி ஒரு உடற்பயிற்சி ஆசிரியரின் செல்ல மகள்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6680909-114474567734436771?l=magarantham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6680909/posts/default/114474567734436771'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6680909/posts/default/114474567734436771'/><link rel='alternate' type='text/html' href='http://magarantham.blogspot.com/2006/04/blog-post.html' title='உடற்கல்வி ஆசிரியர்கள் - சீமாச்சு'/><author><name>மகரந்தம்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://img75.photobucket.com/albums/v228/magaranthampicts/magarantham.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6680909.post-111246335194269047</id><published>2005-04-02T22:58:00.000+05:30</published><updated>2005-04-02T23:07:29.913+05:30</updated><title type='text'>மயிலாடுதுறை மக்களின் கவனத்திற்கு...</title><content type='html'>&lt;img src="http://img.photobucket.com/albums/v123/rajni_ramki/chinna1.jpg" alt="Image hosted by Photobucket.com"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மயிலாடுதுறை சம்பந்தப்பட்ட பார்வைகள், நினைவுகள் வரவேற்கப்படுகின்றன. மாயவரத்தான் நடத்தும் &lt;b&gt; www.mayiladuthurai.net&lt;/b&gt; இணையத்தளத்தில் மே மாதம் முதல் பல மாற்றங்களை செய்ய உத்தேசம்.மற்ற நகரங்களுக்கான இணையத்தளங்களோடு இதை வித்தியாசப்படுத்தி காட்டமுடியும் என்று நினைக்கிறோம். இதன்மூலம் மயிலாடுதுறை முலை மூடுக்குகளில் நடக்கும் சங்கதிகள், முக்கியமான இடங்களின் லேட்டஸ்ட் போட்டோக்கள், டூர் கைடுலைன்ஸ் போன்றவையெல்லாம் இடம்பெறும். மயிலாடுதுறையின் எல்லா இடங்கள், தெருக்கள்  (உதாரணத்திற்கு பியர்லஸ் தியேட்டர், மகாதானத்தெரு) பழைய போட்டோவோ அல்லது அது சம்பந்தமான நினைவுகளோ இருந்தால் கட்டுரை வடிவில் எழுதி அனுப்பி வைக்கவும். தங்களைப்பற்றிய சிறு குறிப்புடன் எப்போதும் இணையத்தளத்தில் இருக்கும்படி செய்யப்படும். மயிலாடுதுறை சார்ந்த எழுத்தாளர்களுக்கான அமைப்பான 'மகரந்த'த்திற்கு இந்த இணையத்தளத்தில் இடமளிக்கப்படுகிறது. மயிலாடுதுறை மற்றும் சுற்றுப்புறங்களில் வசிக்கும் படைப்பாளிகள், புலம்பெயர்ந்த படைப்பாளிகள், வி.ஐ.பிக்கள் என சகலரின் விபரமும் இடம்பெறும். மயிலாடுதுறையோடு சம்பந்தப்பட்ட அனைத்து நண்பர்களுக்கும் இந்த செய்தியை தெரிவியுங்கள். பரிபூரண ஒத்துழைப்புக் கொடுப்பீர்கள் என்கிற ஓரே நம்பிக்கையில் களமிறங்குகிறோம்....&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் ராம்கி&lt;br /&gt;www.mayiladuthurai.net இணையத்தளத்திற்காக.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6680909-111246335194269047?l=magarantham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6680909/posts/default/111246335194269047'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6680909/posts/default/111246335194269047'/><link rel='alternate' type='text/html' href='http://magarantham.blogspot.com/2005/04/blog-post.html' title='மயிலாடுதுறை மக்களின் கவனத்திற்கு...'/><author><name>மகரந்தம்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://img75.photobucket.com/albums/v228/magaranthampicts/magarantham.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6680909.post-110067974430948331</id><published>2004-11-17T13:42:00.000+05:30</published><updated>2004-11-17T13:52:24.310+05:30</updated><title type='text'>மயிலாடுதுறை சார்ந்த படைப்புகள்</title><content type='html'>&lt;img src="http://img.photobucket.com/albums/v123/rajni_ramki/my002.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காமிராவுக்கு முன்னால் - (வலமிருந்து இடமாக)  சின்னஞ்சிறு கோபு, டீ.எஸ்.டீ ராயன், பரசலூர் அன்பன் உத்தமசீலன், ச.தியாகராஜன், நெடுமாறன்&lt;br /&gt;&lt;br /&gt;காமிராவுக்கு பின்னால் - ஜெ. ரஜினி ராம்கி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை சம்பந்தப்பட்ட பார்வைகள், நினைவுகள், அனுபவங்களை "மகரந்தம்" வரவேற்கிறது. &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் &lt;/strong&gt;&lt;a href="mailto:magarantham@hotmail.com"&gt;&lt;strong&gt;magarantham@hotmail.com&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6680909-110067974430948331?l=magarantham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6680909/posts/default/110067974430948331'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6680909/posts/default/110067974430948331'/><link rel='alternate' type='text/html' href='http://magarantham.blogspot.com/2004/11/blog-post.html' title='மயிலாடுதுறை சார்ந்த படைப்புகள்'/><author><name>மகரந்தம்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://img75.photobucket.com/albums/v228/magaranthampicts/magarantham.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6680909.post-109481488929210672</id><published>2004-09-10T16:36:00.000+05:30</published><updated>2004-09-13T15:02:58.896+05:30</updated><title type='text'>தலையங்கம் - செசன்யர்களின் சிந்தாந்தம்</title><content type='html'>&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt; செசன்யர்களின் தீவிரவாத வெறிக்கு நூற்றுக்கணக்கான பள்ளிக்குழந்தைகள் பலியாகியிருக்கும் சோக காட்சிகள் மனதை விட்டு அகலாதவை. கும்பகோணத்திலாவது இயற்கையின் சதியால் குழந்தைகளை இழக்கவேண்டியிருந்தது. ஆனால், ரஷ்யாவில் பலியாகியிருப்பதோ கோர தாக்குதலினால். மதரீதியிலான உணர்வுகள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதற்காக மீடியாவினர் கண்ணைமூடிக்கொண்டு வாளாயிருத்தல் கூடாது என்பதுதான் நமது ஆதங்கம். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வன்முறை மீது நம்பிக்கை கொண்டிருக்கும் எந்த சிந்தாந்தங்களுக்கும் நிரந்தர வெற்றி கிடைத்ததாக சரித்திரமில்லை. செசன்யர்கள்  மட்டுமல்ல ஆயுதமேந்தி போராடும் எல்லா குழுக்களுமே கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#330033;"&gt;&lt;em&gt;&lt;strong&gt;அறிவிப்பு&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#333399;"&gt;மயிலாடுதுறை பகுதி கலை, இலக்கிய எழுத்தாளர்களை ஒருங்கிணைக்கும் மகரந்தம் அமைப்பின் முதல் கூட்டம் சென்ற ஞாயிற்றுக் கிழமை (5.9.2004) மயிலாடுதறையில் நடந்தது. அமைப்பின் தலைவராக திரு. சின்னஞ்சிறு கோபுவும், செயலாளராக திரு. டீ.எஸ்.டீ ராயனும் ஒருங்கிணைப்பாளராக திரு. தியாகனும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பரசலூர் அன்பன் திரு. உத்தமசீலன், திரு. நெடுமாறன், திரு. ஜெ.ரஜினி ராம்கி, சச்சின் திரு. சக்திவேல் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#333399;"&gt;&lt;br /&gt;1. மகரந்தம் அமைப்பின் எழுத்தாளர்கள் சந்திப்புக் கூட்டத்தை பிரதி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை மயிலாடுதுறையில் தொடர்ந்து நடத்துவது&lt;br /&gt;&lt;br /&gt;2. மகரந்தம் அமைப்பின் சார்பில் இணையத்தில் கூட்டு வலைப்பதிவு ஒன்றை நடத்தி வளரும் எழுத்தாளர்களை இணையத்துக்கு அறிமுகப்படுத்துவது&lt;br /&gt;&lt;br /&gt;3. மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரத்திலிருக்கும் எழுத்தாளர்களையும் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களையும் ஒன்றுபடுத்தி அவர்களது படைப்புகளைப் பற்றிய பார்வைகளை பரிமாறிக்கொள்வதும் சக எழுத்தாளர்களுக்குள் பரஸ்பரம் அறிமுகம் செய்து கொள்வது அல்லது அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;மகரந்தம் அமைப்பின் இணையத்தள முகவரி &lt;/span&gt;&lt;a href="http://magarantham.blogspot.com"&gt;&lt;span style="color:#333399;"&gt;http://magarantham.blogspot.com&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#333399;"&gt;தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் &lt;/span&gt;&lt;a href="mailto:magarantham@hotmail.com"&gt;&lt;span style="color:#333399;"&gt;magarantham@hotmail.com&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6680909-109481488929210672?l=magarantham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6680909/posts/default/109481488929210672'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6680909/posts/default/109481488929210672'/><link rel='alternate' type='text/html' href='http://magarantham.blogspot.com/2004/09/blog-post_10.html' title='தலையங்கம் - செசன்யர்களின் சிந்தாந்தம்'/><author><name>மகரந்தம்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://img75.photobucket.com/albums/v228/magaranthampicts/magarantham.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6680909.post-109473217537288783</id><published>2004-09-09T17:44:00.000+05:30</published><updated>2004-09-09T17:46:15.373+05:30</updated><title type='text'>சோஷலிஸம் சொல்லும் செய்தி</title><content type='html'>“நடவுசெய்த தோழர்கூலி நாலனாவை ஏற்பதும் உடலுழைப்பில்லாத மங்கை உண்டுறங்கி வாழ்வதும் “ தான் கடவுள் ஆணையா? எனறான் பாரதி&lt;br /&gt;&lt;br /&gt;மிக பெரிய கம்யூனிச புரட்சியை வித்திட்டான் அன்றே.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது உழைக்கும் வர்க்கத்தை சார்ந்துதான் இருக்கிறது, ஆனால் அதனை வீழ்ச்சி செய்வது உழைக்கும் வர்கத்தின் உழைப்பினை உறுஞ்சும் வரக்கமாகத்தான் இருக்கிறது.ஒரு உழைப்பாளி தான் சிந்தும் ஒவ்வொரு துளி வியர்வையும் இந்நாட்டின் வளர்சிக்கு வித்திடுகிறான் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் உழைக்கும் வர்க்கத்தின் நிலையோ மிக மோசமாக இருக்கின்றது ஒரு வேலை உணவு உண்ண வழியில்லாத நிலையில் இருக்கிறான்.  உழைக்காமல் வீட்டில் உண்டு உறங்கி வாழும் மக்கள் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாமல் நிம்மதியாக வாழும் போது உழைக்கும் மக்களுக்கு ஒரு வேலை உணவு கிடைக்காமல் போகும் நிலை என்ன? இதற்கு யார் காரணம் ?நாட்டின் ஒருபுறம் பசியின் கொடுமையினால் வாடி வதைந்து  முடிவில் மாண்டுபோகும் மக்கள். இன்னொரு பக்கம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுவிட்டதாக அரசின் அறிவிப்பு வேறு. அது மட்டுமில்லாமல் கிடங்கில் அளவுக்கு அதிகமான இருப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய மக்கள் தொகையில் சுமார் 30 சதவீதத்தினர் வறுமைகோட்டிற்று கீழ் வாழ்கின்றனர். அவர்கள் யாவரும் உழைக்க மறுப்பவர்கள் அல்லபிழைப்பே கிடைக்காத நிலையில் இவர்களை மரணம் தான் தன் ஆதரவு கரங்களை நீட்டி அழைத்து கொண்டது&lt;br /&gt;&lt;br /&gt;உழைப்பைபற்றி எதுவுமே தெரியாத அவர்கள்(உண்டுறங்கி வாழ்வோர்) நிம்மதியாக வாழமுடிகின்றது. ஆனால் நாள் முழுதும் உழைக்கும் கூலி(குறைந்தபட்ச சம்பளம்) பெறுவதில் தான் எத்தனை சிக்கல்  தொன்றுதொட்டு நடந்து வரும் இந்த கொடுமைகள் என்று தீரும்?&lt;br /&gt;&lt;br /&gt;இந்நாட்டில் கிட்டதட்ட 70 (எழுபது ) சதவிகிதத்தினர் கிராம புறங்களில் வாழ்கின்றனர் என்பது உண்மை.இந்நாட்டின் இதயங்களே கிராமங்களில் இருக்கின்றது என்பதும் உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நாட்டின் பொருளாதாரத்தில் கிராமங்கள்pன் விவசாயத்தினால் ஓரளவுக்கு ஏண், முடிந்தவரையில் முன்னேற்றம் காணமுடிகின்றது என்பதும் அப்பட்டமான உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் 30 சதவீதத்தில் பெரும் பகுதியினர் கிராமங்களில் தான் வாழ்கின்றனர்.இவர்களுக்கு என்ன செய்தது இந்த அரசு ?&lt;br /&gt;&lt;br /&gt;கிராம புறங்களில்  இறக்கும் வரையில் உழைத்து  உழைத்து ஓடாய் போனோர்எத்தனை பேர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா ஏழைநாடா? யார் சொன்னது  இது முற்றிலும் உண்மையில்லாமல் இருக்கிறது என்பது தான் உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;உலக செல்வந்தர்களில் ஒரு சில பேர்கள் இங்குதான் இருக்கிறார்கள்ஆம் இந்த ஏழை நாட்டில் இது மட்டுமல்ல வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் பலரும் பெரும் செல்வர்தர்காக இருக்கும் போது யார் சொன்னது ஏழை நாடென்று.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம் எங்கள் இந்தியாவில் பள்ளி இல்லாத ஊர்கள்; பல ஆயிரம், ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாதவை பல லட்சம், சரியான போக்கு வரத்து சாலைகள் இல்லாதவை பல நு}று, வீடில்லாதோர் பல கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், கோயில்கள் இல்லாத தெருக்கள் எங்கள் இந்தியாவில் எங்குமில்லைஆம் இந்தியாவில் இருக்கும் கோயில்கள் கணக்கிட முடியாதது வானத்து விண்மீன்கள் என்ன? கோயில்களின் நகரமாம் கும்பகோணம் நகரில் மட்டும் சுமார்108 கோயில்கள் இருக்கின்றது. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் கோயில்கள் இந்நாட்டின் மொத்த மக்கள் தொகை எண்ணிக்கையில் சுமார் 1 மூ    இருக்கும் அவைகளுக்கு இருக்கும் சொத்துகளும் ஒவ்வொன்றுக்கும் ஒரு மாநிலத்திற்கான ஒரு வருடம்  செலவினம் மேற்கொள்ளும் அளவிற்கு. அது மட்டுமில்லாமல் அதற்காக அரசு மேற்கொள்ளும் செலவினம் வேறு. இந்நிலையில் ஒவ்வொரு குட்டி அரசை நடத்தி வரும் மடங்கள் இவைகள் எல்லாம் அங்கு இல்லை ( வளர்ந்த நாடுகளில் காரணம் இதுவாக கூட இருக்கலாம்) இந்நிதிகளை எல்லாம் வளர்ச்சி பாதையில் செயல்படுத்தினால் இன்னும் முன்னதாகவே அடைந்திருக்கலாம் நாமும்&lt;br /&gt;&lt;br /&gt;நாள்தோறும் வறட்சியின் பிடியில் சிக்கிக்தவிக்கும் (உடன் பிறப்புக்கள் கழக தோழர்கள், ரத்தத்தின் ரத்தங்கள்) விவசாய பெருமக்கள் மரணத்துடன் போரட்டம்.உண்ண உணவுக்கு வழியில்லாத நிலையில் தன் முன்னே பசியென்றொருவன் வந்தால் இல்லையென்றொரு வார்த்தையை இல்லாமல் செய்யும் இந்த விவசாயிகள்  இல்லாமையை பெற்று தவிக்கின்ற நிலைதான்  என்ன பரிதாபம் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;“தனி மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்”இன்றும் நம் காதுகளில் இன்றும் ஒலித்து கொண்டு தான் இருக்கிறதுகேட்டுகொண்டுதான் இருப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;நகரத்தில் உள்ள ஒரு குடும்பம் உண்பதற்காகஒன்பது நபர்கள் கிராமத்தில்  உழைக்கின்றார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.ஆம் உழைக்கின்ற அவனுக்கு தெரியவில்லை உனக்காக உழைக்கின்றோம்என்பது.ஆட்சிகள் மாறும்,ஆட்கள் மாறலாம்  காட்சிகள்(பட்டினி சாவு) மட்டும் என்றும் மாறாது.&lt;br /&gt;&lt;br /&gt;கூனி குறிகிய நிலையிலும் உழைத்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தான் இவர்களுக்கு .குடும்பத்தில் புறக்கணிக்கப்பட்ட பல வயது முதிர்த முதியவர்கள் நகர்புறங்களில் இறந்துன்ன முற்படுகின்றனர் இது மிக பெரிய சமூகபிரச்சினையாகும்.நாளுக்கோர் முதியார் இல்லம், தொட்டில் குழந்தை திட்டம் இவைகள் அனைத்தும் நாட்டின் வளர்ச்சிக்கல்ல. நாட்டின் உயிர் நாடியான விவசாயத்திற்கு வழங்கப்படும் பயிர் கடனுக்கு வட்டி விகிதம் விதித்த அரசு, மக்களின் வரிப்பணத்தில் ஊதியமாக பெறும் அரசியல்வாதிகள் வாங்கும் கார்களுக்கு  0மூ வட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் இருபதாண்டுகளில் இந்தியா உலக வல்லரசு நாடுகளில் இதுவும் ஒன்றாகிவடும் . ஆம்  ஆனால் இப்போது வல்லரசுகளாக இருக்கும் நாடுகளின் வளர்ச்சி இன்னும் பல மடங்கு உயர்துவிடும் என்பதும் மறுக்க முடியாத உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt; வெறும் சட்டங்கள் போடுவதாலும், திட்டங்கள் தீட்டுவதாலும் மட்டும் நம் இந்த இழி நிலையை உயர்த்தி கொள்ள முடியாது. வளர்ச்சிக்காக போடும் பல்வேறு திட்டங்கள்  வளர்ந்ந பொருளாதார நிலையினருக்கே சென்றடைகிறது.எத்தனையோ முறைகள் தவறாக பயன்படுத்தப்பட்ட சட்டங்கள் திட்டங்கள் இவற்றினால் இந்நிலைக்கு எந்த ஒரு சுமூகமான தீர்வையும் காண முடியாது&lt;br /&gt;&lt;br /&gt;நம் நாடு இன்னும் இருபதாண்டுகளில் வல்லரசு ஆவதைப்பற்றி பெறுமைப்படாத யாரும் இருக்க முடியாது . ஆனால் என் நாடு பொருளாதாரத்தில் வளர்ந்த அந்த காலக்கட்டங்களிலும,; வீதியின் ஓரத்தில் படுத்துறங்கும் மனிதன், குப்பை தொட்டிகளில் நாய்களோடு போட்டிப்போட்டுக்கொண்டு உணவு உண்ணும் மனிதன், வீடில்லாதவர்கள், உண்ண உணவில்லாதவர்கள், பசியின் கொடுமையினால் உயிரிழந்தோர், இல்லாமல் இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக புகைவண்டியில் சென்னை செல்ல வேண்டுமானால் ஏறி அமர்ந்ததம் போய் சேர்ந்து விடாது. அதனுடன் உள்ள முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு பயணப்பபெட்டிகளும் சேர்ந்து சென்றால் தான் சென்னையை அடைய முடியும் அதை விடுத்து நான் அவசரமாக போக வேண்டும் என்று வண்டியின் மேலே ஏறி ஓடுவது எவ்வளவு பெரிய முட்டாள் தனமோ? அதேபோல் தான் இந்நாட்டில் 30 கோடி வறியவர்கள், என்றைக்கு தன்னிறைவு பெற்று வறுமைக்கோட்டிலிருந்து மீள முடிகிறதோ? அன்று தான் இந்நாடு வளர்ச்சி பாதையில் போகிறது என்றென்னலாம் .அதுவரையில் உலக வல்லரசுகளில் இந்தியாவும்  ஒன்று என்ற பெருமையோ, உலக பணக்காரர்களில் இந்தியாவில் பல போர்கள் இருக்கிறார்கள் என்ற பெருமையோ நம்மை இன்னும் பின்னுதள்ளிவிடும் என்பதில் சிறிதேனும் ஐயமில்லை….&lt;br /&gt;&lt;br /&gt;      ஃக.நெடுமாறன்ஃ     &lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6680909-109473217537288783?l=magarantham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6680909/posts/default/109473217537288783'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6680909/posts/default/109473217537288783'/><link rel='alternate' type='text/html' href='http://magarantham.blogspot.com/2004/09/blog-post_09.html' title='சோஷலிஸம் சொல்லும் செய்தி'/><author><name>மகரந்தம்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://img75.photobucket.com/albums/v228/magaranthampicts/magarantham.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6680909.post-109421559403847745</id><published>2004-09-03T18:08:00.000+05:30</published><updated>2004-09-03T18:16:34.036+05:30</updated><title type='text'>கூட்டாஞ்சோறு</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#993300;"&gt;பி.கே. சிவகுமார்&lt;/span&gt;&lt;/strong&gt;    &lt;a href="http://pksivakumar.blogspot.com/"&gt;http://pksivakumar.blogspot.com/&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களுக்கான உரிமைகள், சுதந்திரம் ஆகியவை பற்றிப் பேசும்போது மஹாகவி பாரதி பெண் விடுதலை என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். பல நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்து நோக்குங்கால் காரைக்கால் அம்மையாரையும், ஆண்டாளையும் (கன்னடத்தில் அக்கம்மா தேவியையும்) பெண் விடுதலையின் சின்னங்களாக ஒருவர் பார்க்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;"சங்க காலத்துக்கு முந்தைய புராதன தமிழ்ச் சமூகம் தாய்வழிச் சமூகமாக இருந்திருக்கலாம்" என்று எழுதுகிற ஜெயமோகன் அதற்கு ஆதாரமாக சங்கப் பாடல்களிலிருந்து தடயங்களைக் காட்டுகிறார். (தோற்கடிக்கப்பட்ட அன்னை - ஜெயமோகன் - உயிர்மை - டிசம்பர் 2003). எனவே, பெண் விடுதலை இடையில் இல்லாமல் போனது என்றாலும், அல்லது, ஆரம்பம் முதலே இல்லையென்று சொன்னாலும்கூட பெண் விடுதலை குறித்த பிரக்ஞையும் பெண்களுக்கான உரிய மரியாதை தருகிற பார்வையும் இந்திய மரபிலும் தமிழ் மரபிலும் இருந்திருக்கிறது எனலாம். கேரள தாய்வழி சமூக அமைப்பு அதற்கு இன்னோர் உதாரணம்.1960களின் பிற்பகுதியில் அமெரிக்காவில் எழுந்த பெண்களின் குரல் பெண் விடுதலைக்குப் பெண்ணியம் என்று புதுப்பெயர் கொடுத்தது. அந்தப் புதுக்குரலும் புதுப்பெயரும் எழுந்த அறுபதுகளின் பிற்பகுதியில், தன்னை "நிச்சயமாக" ஒரு பெண்ணியவாதி என்று நம்புகிற கனிமொழி பிறந்தார். ஆனாலும், தமிழ் மரபின் மீதும் சங்க இலக்கியத்தின் மீதும் கனிமொழிக்கு ஆர்வம் இருக்கிறது. அதனாலேயே நஞ்சுண்டன் அவரை, "நெடிய தமிழ் மரபின் தொடர்ச்சியாகக்" காண்கிறார் (அகத்திணை முன்னுரை - நஞ்சுண்டன்).&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு கவிதை என்பது எப்போதும் கவிதை மட்டுமே அல்ல" என்கிறார் கனிமொழியின் கருவறை வாசனைக்கு வாழ்த்துரை எழுதிய கல்யாண்ஜி. கனிமொழியின் கவிதைகளை இந்த வாக்கியத்தின் பின்புலத்தில் அணுகுவது கனிமொழியையும் அவர் எழுத்துகளையும் புரிந்து கொள்ள உதவும். அந்த அணுகுமுறையே, யூ.ஆர்.அனந்தமூர்த்தி போன்ற ஜாம்பவான் எழுத்தாளர்களைக் கூட கனிமொழியைப் பற்றி விசாரித்து அறிந்து கொள்ளச் சொல்லியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;படைப்பை வைத்து மட்டுமே படைப்பாளியை மதிப்பிட வேண்டும் என்பது சரியான அணுகுமுறையாக இருந்தாலும், படைப்பாளியின் குடும்பம், சமூக அந்தஸ்து, அவர் குடும்பத்துப் படைப்பாளிகள், அவர்கள் எழுதியவை, அதிலிருந்து படைப்பாளி எவ்வாறு வேறுபடுகிறார் அல்லது வேறுபடவில்லை என்கிற பல கதவுகளின் வழியே படைப்பாளியை அணுகுவதும் மதிப்பிடுவதும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது. விமர்சனம் என்ற ரீதியில் இவை செய்யப்படாதபோது, படைப்பாளியைப் புரிந்து கொள்ளவும், படைப்பின் மீது பரிவு காட்டவும் இத்தகைய அணுகுமுறை உதவும் என்றும் சொல்லலாம். சமூக அந்தஸ்து மறுக்கப்பட்டவர்கள், புதியதாக எழுத வந்தவர்கள் என்ற இத்தகைய பல அடையாளங்களே தலித் இலக்கியத்தையும் பெண் எழுத்தாளர்களையும் புரிந்து கொள்ளவும் ஆதரிக்கவும் உதவவில்லையா. அதுபோல.தன் குடும்பம், பெற்றோர் ஆகியவற்றின் மூலம் பரவலாக அறியப்படுகிறார் என்பது கனிமொழி போன்ற எழுத்தாளர்கள் மீது பலரும் வைக்கிற குற்றச்சாட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;குடும்ப அந்தஸ்து என்பது பலநேரங்களில் எழுத்தாளர்களுக்கு வசதியைவிட சுமை¨யைத் தருகிற, சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகிற விலங்காகி விடுகிறது. இதைக் குற்றம் சாட்டுகிற பலர் அறிவதில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. குடும்பமும் பெற்றோரும் ஒரு நல்ல அறிமுகத்துக்கு உதவக் கூடும் ஆனால் நல்ல எழுத்தாளர் என்ற பட்டம் வாங்கித்தர எழுத்துதான் துணை நிற்கும் என்பதைக் கனிமொழி அறிந்திருக்கிறார் என்பதை அவர் எழுத்துகளில் இருந்து அறிய முடிகிறது. நல்ல கவிதைகளைத் தந்ததாலேயே தி.க.சிவசங்கரன் மகன் என்ற அளவுகோலை விட்டு வெளிவந்து கல்யாண்ஜி என்ற கவிஞரை அறிந்து கொள்ளவும், கல்யாண்ஜியின் தந்தை தி.க.சி என்று சொல்கிற அளவுக்கும் கல்யாண்ஜியைப் புரிந்து கொள்ள வைத்தது. அப்படியே, கனிமொழியின் எழுத்துகளைப் படிக்கும்போது அவர் தந்தையின் புகழ், பிம்பம், நடை, கருத்தாக்கங்கள் ஆகியவற்றை விட்டு வெளிவந்து தனக்கென ஒரு தனிஅடையாளம் உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்பதை விமர்சகர்களும் ஒத்துக் கொள்வார்கள். அவர் தந்தையின் எழுத்துகளை விமர்சிப்பவர்கள் கூட கனிமொழி எழுத்துகளில் தென்படுகிற மரபின் தொடர்ச்சி, நவீனம், பெண் விடுதலை, தனிஅடையாளம், முற்போக்கு (பெரும்பாலும் இடதுசாரி) கருத்தாக்கங்களை மகிழ்வுடன் கவனித்தே வருகிறார்கள் என்பது என் அனுமானம்.&lt;br /&gt;&lt;br /&gt;கனிமொழி பொருளியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். தி ஹிந்து, சிங்கை தமிழ் முரசு ஆகிய நாளிதழ்களில் பணியாற்றிய அனுபவமும் உண்டு. கருவறை வாசனை (1995), அகத்திணை (2003) ஆகிய கவிதைத் தொகுதிகளும், பார்வைகள் (1995), கறுக்கும் மருதாணி (2003) ஆகிய கட்டுரைத் தொகுதிகளும் வெளிவந்திருக்கின்றன.கனிமொழியின் கவிதைகளைப் பற்றிப் பேசவரும்போது நஞ்சுண்டன் பின்வரும் கருத்துகளைத் தெரிவிக்கிறார்: (அகத்திணை முன்னுரை - நஞ்சுண்டன் - 2003. வாக்கிய அமைப்பு வசதிக்காக என் வார்த்தைகளை ஆங்காங்கே சேர்த்திருக்கிறேன். ஆனால், கருத்தை மாற்றவில்லை. )&lt;br /&gt;&lt;br /&gt;1.) வெறுமனே இலக்கியத்தில் தங்களுக்கான இட ஒதுக்கீட்டைக் கேட்டுப் பெறுவதாக இல்லாமல், ஆண்களால் சொல்ல முடியாத பெண்களின் பிரச்சினைகள் உள்ளாகப் பெண்ணுக்கத்தின் நுட்பமான கூறுகளைப் பதிவு செய்வது பெண்கவிகள் முன் உள்ள சவாலாகிறது. இதைக் கனிமொழி புரிந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;2.) அமானுடங்கள் கவிதையில் அமைந்து தமக்குள்ளும் மனிதர்களுடனும் உறவுகொள்வதும் மரபின் ஓர் அம்சமே. அமானுடங்களின் இயக்கம் அல்லது அவை மனிதர்களுடன் கொள்ளும் உறவுகள் கனிமொழி கவிதைகளின் இரண்டாவது தொகுதியில் தென்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;3.) கனிமொழியின் பல கவிதைகளையும் கவனித்தால் அவர் தன்னை மரபிலிருந்து விலக்கிக் கொள்ள நினைக்கிறவராகத் தெரியவில்லை. ஆனால், மரபு சார்ந்த அமைப்புகளால் ஒரு சார்பாகக் குவியும் அதிகாரத்தின் மீதான தன் விமர்சனத்தை உரத்துப் பேசாத வரிகளின் மூலம் முன்வைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;4.) கனிமொழியின் கவிதைகள் தமிழ்க் கவிதைகளைக் கூர்ந்து கவனித்து வருகிறவர்களுக்கு நிச்சயம் வேறு சில கவிதை வரிகளை மனத்தில் கிளர்த்தும். (இதை நஞ்சுண்டன் பாராட்டாகவே சொல்கிறார். ஒரு கவிதை அனுபவம் அதன் கருப்பொருளுடன் அல்லது அது சார்ந்த பிற காரணிகள் தொடர்புடைய இன்னொரு கவிதையையோ அனுபவத்தையோ நினைவுறுத்துவது போல.)&lt;br /&gt;&lt;br /&gt;5.) கனிமொழியின் கவிதைகள் முதல் தொகுதியைவிட இரண்டாவது தொகுதியில் கச்சிதமான வடிவத்தில் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;6.) ஒரு கருத்தாடலை முன்வைக்காத தூய கவிதை (pure poetry) எழுதுகிற நிலைக்கு கனிமொழி வளர்ந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;7.) தன்னை அடையாளப்படுத்தும் படிமங்களைக் கனிமொழி இனிமேல்தான் படைக்க வேண்டும். ஆனால், அவருக்கு அது சாத்தியம் என்பதற்கான தடயங்கள் தென்படுகின்றன.கறுக்கும் மருதாணி கட்டுரைத் தொகுதிக்கு முன்னுரை எழுதிய ரவிக்குமார் பின்வருமாறு எழுதியிருக்கிறார்." இந்தக் கட்டுரைகளின் சொற்களுக்கு அப்பால் ததும்பிக் கொண்டிருக்கும் 'தாயன்பு' பற்றிக் குறிப்பிட்டே ஆகவேண்டும். புத்தர் குறிப்பிட்ட 'மைத்ரி' என்ற பொருளில் அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தூங்கும் குழந்தையை மடியில் கிடத்திக் கொண்டு அதனுடன் பேசுவது போல, கவனமாகத் தனக்குத்தானே பேசிக் கொள்ளும் ஒரு தாயை இக்கட்டுரைகள் நினைவுபடுத்துகின்றன. பொய்மையோ பாசாங்கோ இல்லாத, பொறுப்பும் கடப்பாடும் கொண்ட சொற்களால் நெய்யப்பட்டிருக்கும் இக்கட்டுரைகள் இப்படியாகத்தான் படைப்பிலக்கியத்தின் மதிப்பையும் ஆற்றலையும் பெறுகின்றன. அதிகாரத்தின் பொறியமைவுகளைச் சிதைத்து அதிகார உறவுகளை மாற்றியமைக்கவும் முற்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு எழுத்தாளனுக்கு தாயைப் போன்ற பொறுப்பும் உணர்வும் கவலையும் அன்பும் கண்டிப்பும் வேண்டும். அதுவே நல்ல எழுத்தாளனுக்குள் இருக்கிற தேடல். (இதை நான் ஆன்மீகத் தேடல் அல்லது உண்மைக்கான தேடல் என்பேன். ஆன்மீகம் என்றால் பக்தி என்ற பொருளில் அல்ல.) அந்தத் தேடல் எழுத்தாளனையும், எழுத்தையும், அவன் சார்ந்த சமூகத்தையும் எட்ட இயலாத உயரங்களுக்கு அழைத்துச் செல்லும். இத்தகைய மனப்பான்மையும் தேடலும் ஒருவரை ஞானியாக்கவும் கூடும். "முக்காடிட்டவாறு கதவின் பின்னால் மறைந்து நின்று அடக்க ஒடுக்கமாகப் பேசும் குல ஸ்திரீயானாலும் சரி, வாயில் தாம்பூலம் தரித்துக் கொண்டு, வெளித் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு, போவோர் வருவோரைப் பார்த்துச் சிரிக்கும் பரஸ்திரீயானாலும் சரி, நான் பராசக்தியையே காண்கிறேன்" என்ற ராமகிருஷ்ண பரமஹம்சருக்குள் இருந்த தாயைப் போன்ற பொறுப்பும் மனநிலையும் அந்தத் தேடல் அடைந்த முதிர்ச்சியுற்ற கண்டுபிடிப்புக்கு உதாரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய ஒரு தேடல் தன்மையைக் கொண்டிருக்கின்றன கனிமொழியின் எழுத்துகளும் கவிதைகளும்.வேண்டியது வேண்டிவேண்டியது கிட்டியபின்வேண்டியது வேண்டாமனதுஎன்கிற வரிகள் அந்தத் தேடலைத், தேடல் தொடர்கிற நுட்பத்தைப் பதிவு செய்வதைக் காணலாம். அந்தத் தேடல் தமிழ் இலக்கியத்தில் கனிமொழியின் பெயரைப் பதிக்கிற பல படைப்புகளை அவரிடமிருந்து கொணரும் என்ற எதிர்பார்ப்பையும் தருகிறது. அந்த எதிர்பார்ப்பை நிறைவு செய்யத் தேவையான மரபும், தைரியமும், தனித்தன்மையும், நவீனமும், சுதந்திர உணர்வும், கருத்தாக்கங்களும் அவர் இதுவரை எழுதியவற்றில் நிறைய இருக்கின்றன என்பது மகிழ்ச்சி தருகிற விஷயமாகும்.தான் சொல்ல நினைப்பதைத் தயக்கமின்றி முன்வைக்கும் அச்சமற்ற தன்மையைக் கனிமொழி எழுத்துகளில் பார்க்க முடிகிறது. அச்சம் தவிர்த்து சொல்ல நினைப்பதைச் சொல்வதில் உண்டாகிற மகிழ்ச்சியும் போதையும் பெருமிதமும் அளப்பதற்கரியன. அதைக் கனிமொழி உணர்ந்திருக்கிறார் என்பதை அவர் எழுத்துகளில் பல இடங்களில் காண முடிகிறது.ஒரு சோறாக, "இங்கு தீவிர நவீன தமிழ்ப் படைப்பாளியான ஜெயமோகனை 'மலையாளி' என்று சொல்லிக் கொச்சைப்படுத்துபவர்கள் இருக்கிறார்கள்" என்று கணிப்பும் காழ்ப்பும் கட்டுரையில் 2002ல் அவர் எழுதியதைக் குறிப்பிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜாதி ரீதியிலான கொடுமைகள் மற்றும் பாகுபாடுகள் ஆகியவற்றை எதிர்க்கிற கனிமொழி பின்வருமாறு எழுதுவது அவர் மீதுள்ள நம்பிக்கையை உயர்த்துகிறது. "சங்கத் தமிழில் எந்த ஜாதிக்கு உரிமை உள்ளது என்று வரையறுத்துக் கூறிவிட முடியுமானால் மற்றவர்கள் ஒதுங்கிக் கொள்ளலாம். உ.வே.சா. படாத பாடுபட்டு சேர்த்திருக்காவிடில் திராவிடப் புகழ் பாடும் இந்தச் செல்வங்கள் எப்போதோ செல்லரித்திருக்கும். அவர் பார்ப்பனர் என்பதால் தமிழ் இலக்கியங்களைக் கடலில் கொண்டு விட்டுவிடலாமா? அல்லது சங்கப் புலவர்களில் யார் இன்ன ஜாதி என்று தெளிவாக வரையறுக்கத்தான் முடியுமா?""நாம் பார்த்தும் கவனிக்காமல் கடந்து போகிறவற்றினூடாக நமது வாழ்வின் ஆதாரமான சிக்கல்களை அணுகியிருக்கிறார் கனிமொழி" என்கிறார் ரவிக்குமார். (கறுக்கும் மருதாணி முன்னுரை - ரவிக்குமார் - 2003). இப்படிப்ப்பட்ட விமர்சனங்களும் வாழ்த்துகளும் தருகிற உற்சாகத்தில் கனிமொழியின் எழுத்துகள் அவருக்கும் சமூகத்துக்கும் பயனுள்ள வகையில் தொடரவும் சிறக்கவும் வேண்டுகிறேன்.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6680909-109421559403847745?l=magarantham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6680909/posts/default/109421559403847745'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6680909/posts/default/109421559403847745'/><link rel='alternate' type='text/html' href='http://magarantham.blogspot.com/2004/09/blog-post_03.html' title='கூட்டாஞ்சோறு'/><author><name>மகரந்தம்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://img75.photobucket.com/albums/v228/magaranthampicts/magarantham.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6680909.post-109421430363715034</id><published>2004-09-03T17:51:00.000+05:30</published><updated>2004-09-03T17:55:03.636+05:30</updated><title type='text'>மீடியாவின் முகமூடி</title><content type='html'>மிகைப்படுத்துதல் என்னும் நோய் மீடியாவில் வேகமாகவே பரவி வருகிறது. பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சிகளிலும் உண்மையின் சதவீதத்தை அறியவே கடினமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பிரபல தமிழ் வார பத்திரிக்கை குஷ்வந்த்சிங்கின் சுயசரிதையை மொழியாக்கம் செய்துவெளியிட்டிருந்தது. அதில் அவர் கூறிய ஒரு சம்பவத்தை சுவராஸ்யத்திற்காக திரித்து வெளியிட்டது. உண்மையை திரித்து கற்பனையை சேர்த்து விற்பனையாக்குவதால் யாருக்கு என்ன லாபம் என்பது மக்களுக்கு தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் விவாகரத்துகள் அதிகரித்து விட்டதாக இன்னொரு பத்திரிக்கை ஒரு ஆய்வை வெளியிட்டது. கூடவே விவாகரத்தான நடிகையின் பேட்டி வேறு. எத்தனையோ பிரச்சினைகளுக்கு நடுவிலும் ஒற்றுமையாக வாழும் குடும்பங்களை பற்றி வெளியிட மனமில்லாத இது போன்ற பத்திரிக்கைகள் குறைந்த சதவீதமே நடைபெறும் விவகாரத்தை வெளிச்சம் போட்டு காட்டி இதுதான் யதார்த்தம் என்கிற கருத்தை நிறுவுவதும் ஒரு சமூக துரோகம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மீடியாவின் செய்திகள் சமுதாயம் பார்க்கும் பார்வையில் இருக்கப்படவேண்டும். ஆனால், இந்த ஊடகங்களோ தங்களின் எண்ணங்களை சமுதாயத்தின் எண்ணங்களாக ஏற்றி வெளியிட்டு சமுதாயத்தையே திசை திருப்ப பார்க்கிறார்கள். சமுதாயம் நன்றாக இருக்கவேண்டும், தவறுகளை இலைமறைகாயாக சுட்டிக் காட்டி விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் பத்திரிக்கை முதலாளிகளிடம் இல்லை. தம்மிடம் அழுக்கை வைத்துக்கொண்டு சமூக பாழ்படுவதற்கு காரணமாக அரசியல்வாதிகளையும் சினிமாக்காரர்கள் செய்யும் தவறுகளை கைகாட்டிக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிக்கைகாரர்கள் செய்வதுதான் வியாபாரம். வலிமை வாய்ந்த ஊடகத்தின் வழியாக மனிதனின் உள்ளுணர்வை தூண்டும் தொழிலைத்தான் இவர்களால் செய்யமுடியகிறதே தவிர, இப்படித்தான் வாழவேண்டும் என்ற வழிகாட்டுதலை அவர்களால் செய்ய முடியவில்லை. இவர்களின் தேவையெல்லாம் சேவை அல்ல. என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள் எழுதுவார்கள். இவர்களை நம்மால் தடுக்க முடியவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;இவை எல்லாவற்றையும் மீறி உண்மையை பிரித்தெடுக்கும் கலையை நாம் புரிந்து கொள்ளவேண்டியது அவசியம். அன்னப்பறவை போல, உண்மையை பிரித்தெடுப்போம். உண்மையை நல்ல எண்ணங்களை பரப்புவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வதந்திகளை புறக்கணிப்போம். பொய்மை பேசுபர்களை இனம் காண்போம். உண்மையின் சதவீதம் ஒன்றுதான் என அறிந்து 99 சதவீத பொய்மையை விரட்டியடிப்போம். அறிவை பின்னுக்கு தள்ளி உணர்ச்சியை தூண்டும் ஊடகங்ளை எச்சரிக்கையுடன் அணுகுவோம். அறிவுக் கண்ணாடி கொண்டு எதையும் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;இராம. சுவாமி.  &lt;&lt;a href="http://groups.yahoo.com/group/mylguys91_93/post?postID=G14v6RQnyDrKxIoHwFe3QqQdPhe-mVynT7cHy8V2lh_vI2TsunkpsC1_5a_lzFPuvCRR8v9UYI9v22HtcdY"&gt;saminathannr@yahoo.com&lt;/a&gt;&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6680909-109421430363715034?l=magarantham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6680909/posts/default/109421430363715034'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6680909/posts/default/109421430363715034'/><link rel='alternate' type='text/html' href='http://magarantham.blogspot.com/2004/09/blog-post.html' title='மீடியாவின் முகமூடி'/><author><name>மகரந்தம்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://img75.photobucket.com/albums/v228/magaranthampicts/magarantham.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6680909.post-109359379932237774</id><published>2004-08-27T13:29:00.000+05:30</published><updated>2004-09-03T17:57:30.446+05:30</updated><title type='text'>ஆயுதமிழந்த எழுத்து</title><content type='html'>தமிழ்த்திரையுலக கால கட்டத்தை நான்கு வகையாக பிரிக்கலாம்.முதலில் 1940 முதல் 1950 கள் வரை தியாகராஜ பாகவதர்; பி.யூ சின்னப்பா காலம்அடுத்து 1950 முதல் 1970 களின் இறுதி வரை : எம்.ஜி.ஆர். சிவாஜி காலம்மூன்றாவதாக 1980 முதல் 1990 களின் இறுதி வரை : ரஜினி கமல் காலம்&lt;br /&gt;&lt;br /&gt;நாடகத்திலிருந்து திரைப்படத்தை நோக்கி வந்த கணேசன் கலைஞர் வசனமெழுதிய பராசக்தி படத்தின் மூலம் புகழ் ஏணியின் முதற்படியில் ஏறத் துவங்கினார். அதே காலகட்;டத்தில் எம்.ஜி.ஆர். பாமர மக்களின் அபிமானத்தைப் பெறும் வகையிலான வேடங்களைப் புனைந்து வெற்றியும் பெற்றார். இப்போது திரைப்படங்கள் நாடகம் பாடல் என்ற அரங்கிலிருந்து குடும்பத்தை சூழலாக கொண்ட திரைக்கதையிலிருந்து உருவாகத் துவங்கின. ஸ்ரீதர், கோபாலகிருஷ்ணன் போன்றோர் இக்காலகட்டத்தில் உச்சத்திலிருந்த இயக்குநர்கள் இருப்பினும் இக்கதைகள் ஒரு வீடு அல்லது ஒரு சிறிய எல்லைக்குள்ளேயே படமாக்கப்பட்டவை என்பதால் அதன் இயல்பான நாடகத்தன்மையிலிருந்து வெளிவர முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கால கட்டத்தில் அதாவது எழுபதுகளின் இறுதியில் தேனிக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்திலிருந்து பட்டணம் நோக்கி வந்த பாரதிராஜாவும் பண்ணைபுரம் இளையராஜாவும் இணைந்து தமிழ்த்திரைப்பட உலகையே தலைகீழாய் புரட்டிப் போட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தனி மனிதனின் காதல், வீரம், ஆண்மை, பெண்மை, அழகு, பாசம், சோகம், காமம் கோபம் என்ற அனைத்தும் உணர்வுப்பூர்வமாய் தமிழ் ரசிகனுக்கு இசை மூலமாகவும் காட்சிகள் மூலமாகவும் ஊட்டப்பட்டன. பாரதிராஜாவின் திரைப்படங்களில் மாஸ்டர் பீஸ் “ முதல் மரியாதை”. இதில் கைக்கிளை காதல் வகை எடுத்தாளப்பட்டது. யாரும் அதிகம் விவரிக்காத பொருள் என்பதாலோ என்னவோ கதையின் சுவாரஸ்யம் கூடிப்போனது. பாரதிராஜா மற்றும் இளையராஜா கூட்டணி கிராமப்புறங்களை மட்டும் படம் பிடித்துக் காட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;1980 களின் மத்தியில் உதவி இயக்குநராக எவரிடமும் பணிபுரிந்த அனுபவமில்லாத திரைப்படத்துறையில் போதிய அறிவு இல்லாத எம்.பி.ஏ படித்த மணி “பகல் நிலவு” என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கினார். முரளியும், ரேவதியும் முறையே நாயகன், நாயகி . படம் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும் சுமாரான வெற்றி பெற்றது பல இயக்குநர்களை ஆச்சரியப்படுத்தியது. அவர்களில் பலருக்கு அப்போது தெரிந்திருக்காது பின்னாளில் அவர் இந்தியத் திரைப்பட உலகின் நட்சத்திர இயக்குநர்களில் ஒருவராவார் என்றும் பல தேசிய விருதுகளை குவிக்கப் போகிறார் என்பதும். அவர் மணிரத்னம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரின் இரண்டாவது படமான இதயகோயில் வெற்றிப்படம். அதனைத் தொடர்நது, மௌனராகம். கதாபாத்திரங்கள் அதிகம் பேசாத படம். ரசிகர்களை அதிகளவில் பேச வைத்த படம்.1980களின் இறுதியில் கமலை வைத்து அவர் இயக்கிய “நாயகன்” படத்துக்கு தேசிய விருது.படம் வணிக hPதியிலும், பெரு வெற்றி. மணிரத்னத்தின் படங்கள் பாரதிராஜா, பாலச்சந்தர் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது. பாலச்சந்தரின் படங்களில் வசனத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு காமிராவின் கண்கள் நடிகர்களின் உணர்ச்சிக்குவியலை மட்டுமே படம் பிடித்துக்காட்டின. மாறாக மணிரத்னத்தின் படங்களில் காட்சியமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;சூரிய உதயத்தின் அழகு, நீரலைகளின் ஓட்டம், புல்வெளிகளில் நீந்தும் பனித்துளிகள், கதை நிகழும் களத்தில் காட்சிகளின் பின்னணியையும் ரசிக்க வைக்க முயற்சி எடுத்துக் கொள்ளப்பட்டது. உதாரணமாக, “இதயத்தை திருடாதே” திரைப்படத்தில் நாகார்ஜுன் வீட்டுக்கதவை திறந்ததும் அதிகாலைப்பனி மெதுவாக உள்ளே நுழைவது காமிரா கவிதையாக்கப்பட்டிருக்கும். அதே போல், நாகார்ஜுன் மாருதி ஜிப்ஸியில் நாயகி கிரிஜாவைத் தேடிச் செல்லும் காட்சியில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமின் உதவியால் இயக்குநர் நம்மையும் ஊட்டிக்கே அழைத்துச் சென்று விடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;தளபதி திரைப்படத்தில் தன் அம்மா யார் என்று அறியாமல் தவிக்கும் ரஜினி கோயிலில் சாமி கும்பிட்டுக்கொண்டிருப்பார். அவர் முகத்தில் இருளின் நிழல் படிந்திருக்கும். ஜெய் சங்கர் ஸ்ரீவித்யாவை சுட்டிகாட்டி தாயார் என ரஜினியிடம் அறிமுகப்படுத்தும் போது கோயிலுக்குள் செல்பவர்கள் வழிவிட்டு ஒதுங்குவதால் வெளிப்படும் வெளிச்சம் ரஜினியின் முகத்தில் விழுமாறு காட்சி அமைந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மணிரத்னத்தின் திரைப்படத்தின் ரசிகர்கள் பொதுவாக இளவயதினராகவே இருப்பர். காரணம் நாயகன் நாயகி இருவரும் குறும்புத்தனம் நிறைந்த வேடங்களையே ஏற்றிருப்பர். காதலன் காதலி அல்லது கணவன் மனைவி என்றால் உரிய பொருத்தமான அந்நியோன்யம் வேடங்களில் மிகவும் மென்மையாகப் புகுத்தப்பட்டிருக்கும். அதில் இயல்புத்தன்மை மிகுந்திருக்கும்.&lt;br /&gt;அடுத்து, அதிகமான வசனங்களைத் திரைப்படங்களில் கேட்டு கேட்டு சலிப்பு ஏற்பட்டவர்களுக்கு இவரது மணியான ரத்தினச்சுருக்க வசனங்கள் உற்சாகத்தை தந்தன. பல கல்லூரி மாணவர்களும் இளவட்டங்களும் இதே ரகத்தில் “முடியாது’ “வரமுடியாது” “என்னால் வர முடியாது” என பேசிக்கொண்டிருப்பது மணிரத்னம் வேருன்றியதற்கு மற்றொரு உதாரணம். நாயகன் திரைப்படத்தில் வேலுநாயக்கரின்(கமல்) வேலுநாயக்கரின் நண்பர் செல்வாவை (ஜனகராஜ்) கன்னத்தில் அறையும் காட்சியில் வேலு நாயக்கர் மகளை அடிக்கப் பாய்ந்:து செல்வாவின் பிடியிலிருந்து திணறிக் கொண்டே “யாரிட்ட இருந்து வந்தது இந்த கை நீட்டற பழக்கம்?” என்பார். உடன் செல்வாவிடமிருந்து, “நம்ம கிட்டேருந்துதான் “ என்று பதில் வரும்.. தேவையற்ற ஒலி எழுப்பும் சண்டை காட்சிகளை தவிர்த்தும் காட்சி அமைப்பின் மூலம் காட்சியின் முக்கியதுவத்தை உணர்த்தும் உத்தியும் மணிரத்தினமுடையது . ரோஜா திரைப்படத்தின் துவக்கத்தில் காஷ்மீரில் தனி நாடு கோரும் தீவிரவாதிகளின் வெறிச்செயல் காட்சியாக காணும் போது காட்சியின் தீவிரத்தை அனைவரும் உணரும் வகையில் அது படமாக்கப்பட்டிருக்கும். நச்சென்ற வசனங்களால் அனைவராலும் ஏற்க்கபபட்டார் மனஜரத்தினம். அதுபோல் தளபதி திரைப்படத்தில் ஒரு காட்சி. தேவா(மம்முட்டி) எதிரிகளால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பார். தேவாவின் மனைவி பாத்திரம் கீதாவுக்கு .அறைக்கு வெளியே அமர்ந்து அழுதுகொண்டிருப்பார் ரஜினி அறையிலிருந்து வெளிவந்து “தேவாவுக்கு ஒன்னுமில்லை “ என்பார் கீதா கண்களை துடைத்துக்கொண்டு ஆர்வமாய் நிமிர்ந்து “டாக்;;டர் சொன்னாரா? “ என்பார் “தேவாவே சொன்னான”; என்பார் ரஜினி. காட்சியின் அத்தகைய தீவிரத்திலும் ஒரு பாத்திரத்தின் நம்பிக்கையை தனக்கே உரிய பாணியில் சொல்வதுதான் மனிரத்தினம் டச்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியளவில் வெற்றி பெறாத “திருடா திருடா” ஆங்கில திரைப்பட பாணியில் ஏடுக்கப்பட்ட மசாலா கவிதை ரசிகர்களை ஈர்க்கும் வகையிலான அனைத்து அம்சம்களும் நிறைந்திருந்தும் இப்படம் பெரும்பாலான ரசிகர்களால் ஏற்க்கப்படாததன் காரணம் தான் புரியவில்லை.; ஏறத்தாழ இதே நிலைதான்&lt;br /&gt;&lt;br /&gt;“உயிரே” திரைப்படத்திற்கும். போராடும் தீவிரவாத தற்கொலைப்படையை சார்ந்த பெண் காதலுக்கும் தன் லட்சியத்திற்கும் இடையே நிகழ்த்தும் உணர்ச்சி போராட்டம் தான் கதை தமிழுக்கு ரொம்ப ரொம்பவே புதுசு. படத்தில் பல காட்சிகள் இயல்பை ஒட்டியே இருக்கும் .மனிரத்தினத்தின் திரைப்படங்களின் வெற்றியே நாம் திரைப்படம் பார்க்கிறோம் என்ற உணர்வு எழாமல் திரைக்குள்ளே காட்சிக்குள்ளே சென்று விட்ட அனுபவம் ஏற்படும் இப்படத்திலும் இது போன்;ற காட்சிகள் அதிகம் ஷாருக்கும் மனிஷாவும் பாலைவன சந்திப்பில் ஒருவரோடு ஒருவர் பேச துவங்கும் காட்சிகளில் மிகைத்தனம் சிறிதும் இருக்காது. மனிஷாவின் கண்களில் தீவிரவாதம் மறைந்து காதல் அரும்புவதையும் மீளவும் காதலை மறைத்து தீவிரம் எழுவதையும் நன்கு காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;“பம்பாய்” இது மனிரத்தினத்திற்கும் மட்டுமின்றி பலருக்கும் சர்ச்சையை ஏற்படுத்திய படம் இப்படத்தின் தொடர்ச்சியாக மணிரத்தினத்தின் வீட்டில் வெடிகுண்டுகள் வீசப்பட்டதும் இதனை தனது பேச்சினு}டே விமர்சித்த ரஜினி கடுமையான விமர்சனத்திற்கு உள்ள்hக்கப்பட்டதும் அனைவரும் அறிந்ததே.மனிரத்தினத்தின் ஒவ்வொரு திரைப்படமும் ஏதாவதொரு பிரச்சினையை சார்ந்தே வெளிவந்த நிலையில் எந்த வித பரபரப்பும் தராத சர்ச்சைக்குள்ளாகாத இளம் காதலர்களின் கதையை தந்தார் மணி.&lt;br /&gt;&lt;br /&gt;“அலைபாயுதே “யில் நாயகன் : மாதவன். நாயகி :ஷாலினி வித்தியாசத்திற்கு சற்றும் சளைக்காத மணிரத்தினம் இப்படத்தின் திரைக்கதையை ஒரு புதிய உத்தியில் சொல்லியிருப்பார். நாயகன் வாயிலாக , துவக்கத்தில் ஒரு பிளாஷ் பேக் காட்சி: பின்பு அதை தொடர்ந்து நடப்பு காட்சி: மீண்டும் பிளாஷ்பெக் காட்சி :மீண்டும் நடப்பு காட்சி என எந்த வகையிலும் யாருக்கும் குழப்பம் ஏற்படாதவகையில் மிகவும் கவனமாக பார்த்து பார்த்து அமைக்கப்பட்ட திரைக்கதை இது. கிளைமாக்ஸ் வரை பரபரப்பு ஏற்படுத்தி முடிவில் சுபமான ஆனால் தமிழ் சினிமாவிற்கே உரிய வழக்கமான சொதப்பல் கிளைமாக்ஸில் படம் முடியும். படம் பெரிய வெற்றி பெற்றது.“மஞ்சள் குடை” என்று பெயர் வைக்கப்பட்டு துவக்கப்பட்ட இந்த திரைப்படம் இலங்கையில் நடைபெறும் பிரச்சினைகளை அலசும் கதையாக உருப்பெற்றது இது “கன்னத்தில் முத்தமிட்டால் என்ற பெயரில் வெளிவந்தது. முக்கியப்பிரச்சனை என கவனமாக கையாளப்பட்டதாலோ என்னவோ இத்திரைப்படத்தில் மணிரத்தினம் முத்திரைகள் எதுவுமே இல்லாமல் போயிற்றா? அல்லது நிலைமையின் தீவிரத்திற்கேற்றவாறு திரைக்கதை அமைப்பதில் உள்ள சாதகங்கள் கூடிவரவில்லையா என்பது தெரியவில்லை . படம் தோல்வியை தழுவியது.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஒரு சாராரையும் படம் திருப்தி செய்ய வில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அனைவரையும் மணிரத்தினத்தின் மீது கோபக்கனைகள் எழுப்பும் வகையில் படம் இருந்துள்ளது. இருமாதங்களுக்கு முன்னர் கூட காலச்சுவடு இது பற்றி தனது கோபத்தை வெளியிட்டியிருக்கிறதிலிருந்து நாம் உணர்ந்து கொள்ளலாம்.அடுத்து உலகின் திரைப்பட மேதை “ இயக்குனர் அகிரோ குரோசோவா வின் திரைப்பட தழுவல் என விமர்;சிக்கப்பட்ட ஆயுத எழுத்தின் தோல்வி.படம் அனைத்து சென்டர்களிலும் ஒரு வாரத்தை தாண்டவில்லை. முற்றிலும் வித்தியாசமான முயற்சி என் பாராட்டப்பட்டாலும் அனைத்து தரப்பினரையும் படம் சென்றடையவில்லை. தமிழ் ரசிகர்கள் புதிய முயற்சியை விரும்பாதவர்கள் அல்ல. அவர்கள் வித்தியாசத்தையும் ஏற்றுக்கொள்ள காத்துகொண்டிருப்பவர்கள். எனவே இப்புறக்கணிப்பை ரசிகர்களின் தவறு என்று சொல்ல முடியாது. ஈர்க்கத்தவறிய மணிரத்தினத்தின் தவறுதான் அது .ஏனெனில் முற்றிலும் வித்தியாசமான படங்களால்தான் பெரும்பாலான தமிழ் ரசிகர்களை மணிரத்தினம் துவக்கத்தில் தன் பக்கம் ஈர்த்தார்.தொடர்ந்து இரண்டு படத்தின் தோல்விகள் மணிரத்தினத்தின் புகழை ஏதுவும் செய்துவிடமுடியாது. எனினும் ரசிகர்கள் விரும்புவதையும் அவர்தர வேண்டும். ஏனெனில் திரைபட வாசனையை சிறிதும் நுகராமல் திரைப்பட இயக்கத்தில் முதல் வரிசையில் அமர்ந்திருப்பவர் மனிரத்தினம். அவரிடமிருந்து சவாலாக முற்றிலும் வித்தியாசமான திரைப்படத்தை அனைவரும் விரும்பும் வகையில் விரைவில் எதிர்பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில் புத்திசாலிகள் சோர்ந்துவிடுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;- ஆதி மயிலாடுதுறை.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6680909-109359379932237774?l=magarantham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6680909/posts/default/109359379932237774'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6680909/posts/default/109359379932237774'/><link rel='alternate' type='text/html' href='http://magarantham.blogspot.com/2004/08/blog-post_109359379932237774.html' title='ஆயுதமிழந்த எழுத்து'/><author><name>மகரந்தம்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://img75.photobucket.com/albums/v228/magaranthampicts/magarantham.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6680909.post-109359355349442249</id><published>2004-08-27T13:26:00.000+05:30</published><updated>2004-09-03T17:58:35.350+05:30</updated><title type='text'>“புத்தம் புதிதாய் புத்தம்”</title><content type='html'>“ஆசையே துன்பத்திற்கு காரணம்” இதைப் படித்து முடித்ததும் பலருக்கு ஐந்தாம் வகுப்பு வரலாற்றுப் பாடங்கள்தான் நினைவுக்கு வரும். புத்த சமயத்தின் கோட்பாடுகள் யாவை? புத்த சமயத்தின் வளர்ச்சி பற்றி எழுதுக? என்ற பல்வுறு வினாக்களுக்கான விடை இக்கட்டுரையின் முதல் வரியிலிருந்துதான் தொடங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதைய சிறுவயது காலகட்டத்தில் ஆசை, மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு நிகழ்வு குறித்த இன்ப எதிர்பார்ப்பு அல்லது எண்ணம் !!’ இதில் துன்பம் எங்கிருந்து வந்து சேர்ந்தது என்று நான் எண்ணியிருக்கிறேன்.&lt;br /&gt;ஆனால் இப்போது அவரது கருத்துக்களின் ஆழம் ஆன்மாவையும் தொடுவதை உணர்கிறேன். ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் ஞான நிலையை எய்தியது குறித்த அனுபவங்களை ;படித்துணரும் போது மெய்சிலிர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குள் இந்த மதம் ஏன் இந்தியாவிற்குள் தழைக்காமல் அழிந்து போனது என்ற கேள்வி எழுவதுண்டு. ஏனெனில் உயிர்கொலைகளை எதிர்த்தல் உருவ வழிபாட்டை விரும்பாதது, தேவையற்ற வீண் சடங்குகளை ஒழித்தல் போன்ற முற்போக்குத்தனமான புரட்சிக்கருத்துகளை துணிவாக இரண்டாயிரத்து ஐநு}று ஆண்டுகளுக்கு முன்பே போதித்தது புத்த மதம்.&lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்றை கூர்ந்து நோக்குகையில் ஒரு உண்மை நமக்கு புலப்படுகிறது.வடஇந்தியாவில் ஓரளவுக்கு வேருன்றிய புத்தமதம் சிறிது கூட தமிழ்நாட்டிற்குள் ஊடுருவ முடியவில்லை. தமிழகத்தின் இருண்ட காலம் என அழைக்கப்பட்ட களப்பிரர்களின் ஆட்சி காலத்தில் (கி.பி. பத்தாம் நு}ற்றாண்டு) களப்பிரர்கள் புத்தமதத்தை பின்பற்றினர் என்பது முற்றிலும் ஆச்சரியம் அளிக்கக்கூடிய செய்தியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னை பொருத்தவரையில் களப்பிரர்களின் ஆட்சி காலத்தை தமிழகத்தின் இருண்ட காலம் என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால் மொழியியல் வல்லுநர்கள் கூட களப்பிரர்கள் ஆட்சி காலத்தில் அவர்கள் ஆற்றிய வீரதீர செயல்கள், சாதனைகள், சிறப்புகள், குறித்த கல்வெட்டுகள், வரலாற்று ஆவணங்கள் கிடைக்கபெறாத காரணத்தால் அன்னாளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறவில்லை என வரலாற்று ஆசிரியர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர் என கூறுகின்றனர். இது நம் ஆய்வுக்குறிய செய்தியன்று.&lt;br /&gt;&lt;br /&gt;களப்பிரர்கள் புத்தமதத்தை நேசித்தனர் என்பதே செய்தியாகும். இவர்கள் தம் ஆட்சி காலத்தில் சேர, சோழ, பாண்டியரகளையும் தம் கட்டுக்குள் வைத்திருந்தனர் என்பதையும் வரலாற்று சான்றுகள் பகிர்கின்றன. சைவ சமயத்தின் பால் பெரும் பற்றுகொண்டிருந்த சேர, சோழ, பாண்டியர்கள்தாம் பின்னாளில் களப்பிரர்களுக்கு எதிராக எழுச்சியுற்று திரண்டு அவர்களை போரிட்டு அழித்து சைவம் தழைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.&lt;br /&gt;அதிலும், குறிப்பாக சோழர்கள் சைவ சமயத்தின் பால் அதிக ஈடு பாடு கொண்டு விளங்கினர் . புதியதாக பல புதிய சைவ சமய கோயில்களை கட்டினர். சிவனடியார்களை ஆதரித்து போற்றினர் . நீண்ட நெடுங்காலத்திற்கு தமிழ்நாட்டை தங்கள் ஆளுகைக்குள் வைத்திருந்த சோழர்களால் பெருமளவில் சைவ சமய கோயில்கள் எழுப்பப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;கீழ் தமிழ்நாட்டில், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மற்றும் திருவாருர் மாவட்டங்களில் காவிரியின் வடகரையிலும், தென் கரையிலுமாக 274 சிவன் கோயில்கள் எழுப்பப்பட்டன. இவற்றில் பல கோயில்கள் புராதனதன்மை வாய்ந்தவை. ஒரு சில மட்டும் பராமரிக்கப்படுகின்றன. பல்வேறு சோழ மன்னர்களால் எழுப்பப்பட்ட பெயர் தெரியாத பல கோயில்கள் இடிபாடுகளாக நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல்வேறு கிராம பகுதிகளில் காட்சி தருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சோழர்கள் சைவத்தின் மீது காட்டிய அளப்பறிய பற்று ஒருபக்கமிருக்க பிற சமய பிரச்சாரகர்கள் போதகர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளும் பிற மதத்தினர் அழிவுக்கு ( புத்தமதம் உட்பட) காரணமாயிற்று.&lt;br /&gt;காலச்சுவடு ஜுலை- 2004 புத்தர் தேசம் என்ற பெயரில் ரவிக்குமார் பத்தி ஒன்று எழுதியுள்ளார். சேலம் மாவட்டம் தியாகனு}ரில் உள்ள பெரிய புத்தர் சிலைகள் குறித்து விரிவாக எழுதியுள்ள ரவிக்குமார் தஞ்சாவூர,;பெரம்பலு}ர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள புத்தர் சிலைகளை பார்ப்பதற்கும் பயணம் மேற்கொண்டதாக தெரிவித்திருந்தார். ஆனால், இம்மாவட்;டங்களில் தான் ஆய்வு மேற்கொண்ட விவரங்கள் ஏதும் இவர் அளிக்காதது ஏமாற்றத்தையே தந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நாகப்பட்டினம் மாவட்டம் சிலப்பதிகாரம் நிகழ்ந்த களமாகிய காவிரிபூம்பட்டினம் பௌத்த மதத்தோடு நெருங்கிய தொடர்புடையது என்பதற்கு வரலாற்று ஆவணங்கள் உள்ளன ஆனால் இவை முறையாக ஆய்வு செய்யப்படவில்லை. அது போலவே நாகப்பட்டினத்தில் தற்போது பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதியில் ஒரு மிகப்பெரிய புத்த விஹார் இருந்தமைக்கு ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அக்காலகட்டத்தில் “படரிதத்த” என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த இடத்தின் பெயர்தான் மருவி “ அவுரிதிடல்”என அழைக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், நாகப்பட்டிணம் பழைய பேருந்து நிலைய பகுதியில் ஒரு பெரிய புத்த மடலாயம் இருந்து காலப்போக்கில் சிதைந்து, அதன் எச்சங்கள் சில நு}று ஆண்டுகள் முன்பு வரை கிடைக்கப்பெற்றதாகவும் மூத்த வயதினர் கூறிவருகின்றனர். நாகப்பட்டினம் மிகப் பழங்காலத்திலேயே இலங்கையுடன் வாணிகத் தொடர்பு கொண்ட நகரமாக விளங்கியது. எனவே, இலங்கையில் புத்த மதம் பரவுவதற்கு முக்கிய தளமாக நாகப்படிணம் மற்றும் புகார் எனப்படும் காவேரிபூம்பட்டிணம் விளங்கியிருக்கக் கூடும் என்பதில் ஐயம் இருக்கமுடியாது. அதேபோன்று பாலி, சுமத்தரா தீவுகள் என்றழைக்கப்படும் இந்தோனேஷியா நாடுகளிலும், மலேஷியா, சீனா, ஹாங்காங் முதலிய நாடுகளில் புத்த மதம் பரவ ஒரு வாயிலாக பூம்புகார் நகரமும், நாகப்பட்டினம் காரணமாக இருக்க வாய்ப்புகளும் இருக்கின்றன.&lt;br /&gt;இந்தியாவில் தோன்றிய புத்தமதம் காலப்போக்கில் தன் வலிமையை இழந்து தளர்வுற்றாலும், அதன் உயிர் நாடி இன்றும், இந்திய மக்களிடையே துடிப்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மதத்தின் மீது ஒருவன் மதம் கொள்ளாமல் இ ருக்க பிற மதத்தினை சேர்ந்தவனை இழிவு படுத்தாமல் இருக்க பிற மதத்து கடவுளின் மீது தனது கோபத்தை திருப்பாமல் இருக்க அப்பாவி மக்களை தன் சுய வளர்ச்சிக்கு, பலியிட விரும்பாத,ஆட்சிப் பொறுப்புக்காக தனது மத உணர்வுகளை பயன்படுத்தாத, கடவுளின் பெயரால், சடங்குகள் நிகழ்த்தாத புத்தரின் மதம் இந்த நாட்டிற்கு இப்போது தேவையாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைக்கு பல காரணங்கலால்,புறக்கணித்து ஒதுக்கி தள்ளிய ஒரு மதத்தினை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கவேண்டிய கனிவான சு10ழல் ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக முறையான ஆய்வுகள், தொல்லியல் துறையால், நாகப்பட்டினம் மற்றும் பெரம்பலு}ர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு, பவுத்தத்தின் வரலாற்றை தோண்டியெடுத்து, உண்மைகளை உலகிற்கு உணர்த்தவேண்டியது இன்றியமையாததாகிறது.&lt;br /&gt;புத்தர் மீண்டும் வருவாரோ? என்னவோ? , ஆனால் புத்தம் வரும் என்னும் நம்பிக்கை நிரம்ப இருக்கிறது. மீண்டும் புத்தம் புதிதாய்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://groups.yahoo.com/group/mylguys91_93/post?postID=eibHB-x1WDOHN9aTAhlgyjGZulwVh-U07hm2U0x0cKnlivcclLu0fYNcYAmNnMnwPSyRiSakDRYY9aj-0hOuuCU"&gt;raj_thia2001@yahoo.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6680909-109359355349442249?l=magarantham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6680909/posts/default/109359355349442249'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6680909/posts/default/109359355349442249'/><link rel='alternate' type='text/html' href='http://magarantham.blogspot.com/2004/08/blog-post_109359355349442249.html' title='“புத்தம் புதிதாய் புத்தம்”'/><author><name>மகரந்தம்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://img75.photobucket.com/albums/v228/magaranthampicts/magarantham.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6680909.post-109359289600718811</id><published>2004-08-27T12:37:00.000+05:30</published><updated>2004-08-27T13:18:16.006+05:30</updated><title type='text'>தமிழ் உரக்கச்சொல்வோம் உலகுக்கு</title><content type='html'>உலகின்  தொன்மை வாய்ந்த தமிழு செம்மொழியாக அறிவிக்க மைய அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் தமிழர்களாகிய நாம் அதன் தொன்மையையும் சிறப்பினையும் அறிந்துள்ளோமா என்றால் பதில் மிகவும் வேதனைக்குரியது தான். நாம் வாழுங்காலத்தில் தமிழ் மொழி அல்லாமல் கூடுதலாக அறிந்து கொள்ளும் மொழிகள் ஒன்றிரன்டு இருந்தாலே பெரிது.  அதிலும் தமிழ் மட்டுமே அறிந்த பலருக்கு  அதனை முழுமையாக அறிந்து கொள்ளாதவர்கள் என்பது முற்றிலும் கசப்பான செய்தியே.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தொடரின் நோக்கம் நம் தாய் மொழியாம் தமிழை, முதலில் நாம்அறிந்து கொள்ள வேண்டும் என்பதே. அதன் பின் உலகமெலாம் பரவும் வகை செய்தல் குறித்து கவலைப்படலாம். தமிழ்- தமிழர்களாகிய நாம் அறியாததா? இப்படி தற்சோதனை அவசியமா? என்று கேள்வியை கேட்பவர்களுக்கு பதிலாக நான் ஒரு கேள்வியை கேட்க போகிறேன். இதற்கு பதில் உங்களுக்கு தெரிந்திருக்குமேயானால் இத்தற்சோதனை தேவையில்லை. தெரியாதபட்சத்தில் நிலமை சற்று கவலைக்கிடம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி கேள்வி இது தான்..&lt;br /&gt;&lt;br /&gt;நம் தாய் மொழியாம் தமிழ் மொழியில் தமிழ்தாய் வாழ்த்தாக நாம் பாடும் “நீராரும் கடலுடுத்த” என்ற பாடலை எழுதியவர் யார் ? என்ன? ஐந்தாம் வகுப்பு தமிழ் புத்தகத்தை தேடவேண்டியிருக்கிறதா? வேற்று மொழிக்காரன் கேட்டுவிடும்  முன்னர் இதற்கான விடையை தெரிந்து கொள்ள வேண்டாமா?&lt;br /&gt;உலகின் முதன் மொழியாம் நம் உயிர் தமிழின்தொன்மையையும்,. பெருமையையும் உரக்க சொல்ல வேண்டாமா? உலகுக்கு.&lt;br /&gt;எனவேதான் இதன் முதற்கட்டமாக சிறப்பு வாய்ந்த நம் தமிழின் தொன்மையையும் மேன்மையையும் உலக தமிழர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இத்தொடர் துவங்கப்பட்டுள்ளது.  இதனை மகரந்தம் அருந்தமிழுக்கு தான் ஆற்றும் ஒரு துளி கடமையாக இருக்கட்டும் என எண்ணுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சரி நாம் நிகழ்ச்சிக்கு போவோம்..  . . .&lt;br /&gt;ஒரு மொழியின் சிறப்பு மற்றும் பெருமை என்பது அதன் தொன்மையில் அடங்கியிருக்கிறது. இரண்டாவதாக அம்மொழி பேசும் மக்கள் அல்லாதவர்கள் மூலமாக அதன் சிறப்பு உறுதி செய்யப்படும் போது அம்மொழிக்கு பெருமை கிடைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையில் தமிழின் பெருமைகளை ஒயின்கால்டுவெல், வீரமாமுனிவர்,(ஜோசப்பெஸ்ஜி) போன்றோர் பாராட்டியுள்ளனர்.&lt;br /&gt;தற்போது கிடைத்துள்ள ஆய்வுகளின் முடிவுப்படி தொல்காப்பியம்தான் தமிழின் முதல் நு}லாக கருதப்படுகிறது. மேலும், முதல் இலக்கண நு}லும் அதுவேயாகும். இதனை தொல்காப்பியர் என்பவர் இயற்றியுள்ளார் என அறியமுடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt; இந்நு}லின் காலக்கட்டம் ஏறக்குறைய 3500 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்க வேண்டும். ஆனால் இந்நு}லின் பல இடங்களில் அதிலும் குறிப்பாக இருநு}றுக்கும் மேற்பட்ட இடங்களில் “ என்மனார் புலவர்” எனும் பெயர் தொல்காப்பியரால் குறிப்பிடப்படுகிறது. இவர் யார் என அறியமுடியவில்லை. சில இடங்களில் இவரை நு}ல் நவில் புலவர் எனவும் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியாகின், தொல்காப்பியருக்கு  சில ஆண்டுகளுக்கு முன்பே யாரோ நுல்களை இயற்றியிருக்கவேண்டும் அவை காலத்தால் அழிந்து போயிருக்கலாம். ஆக தமிழின் தொன்மை தொல்காப்பியரின் காலத்திற்கு இன்னும் சில நு}ற்றான்டுகளுக்கு பின்னால் இழுத்துச்செல்ப்படுகிறது.&lt;br /&gt;மொழியியல் அறிஞர்களால், தொன்மையான மொழிகளாக பின்வரும் மொழிகள் அறிவிக்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;1.கிரேக்கம்,2.இலத்தின்,3.ஹீப்ரு, 4.வடமொழி, 5.தமிழ்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக தமிழின் தொன்மையில் சிறிதும் ஐயமில்லை.&lt;br /&gt;அடுத்ததாக கி.மு பத்தாம் நுற்றான்டு காலத்திலேயே, தமிழ் வணிகர்கள் கடல் கடந்து வணிகம் மேற்கொண்டிருந்தனர் என்பதை  வரலாற்று சான்றுகள் பகிர்கின்றன.குறிப்பாக ரோமாபுரி என்றழைக்கப்பட்ட ரோம் நகரத்துடன் தமிழர்கள் வணிக தொடர்ப கொண்டிருந்தமைக்கு வரலாற்று  ஆவணங்கள் உள்ளன.  இதன் காரணமாக தமிழ் பிற மொழிகளுடன் கலந்தது. பிற மொழிகளும் தமிழுடன் கலந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழின் சங்க காலம்.&lt;br /&gt;&lt;br /&gt;சங்க காலம் என்றதும் ஏதோ சங்கம் இருந்திருக்கவேண்டும் என்று தோன்றுகிறது அல்லவா? ஆம்.1.முதற்சங்கம்2.இடைச்சங்கம்3.கடைச்சங்கம்.&lt;br /&gt;என மூன்று சங்கங்கள் தோன்றி வளர்ந்த மொழி நம் பெருமைக்கும் சிறப்புக்கும் உரிய தமிழ்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுரையில் துவக்கத்தில் கேட்கப்பட்டுள்ள தமிழ்தாய் வாழ்த்து என்ற கேள்விக்கு “மனோன்மனியம் சுந்தரம்” என்பதேயாகும்.&lt;br /&gt;இது தமிழின் முதல் உரைநடை செய்யுள்...---&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(தொடர்வோம்)&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6680909-109359289600718811?l=magarantham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6680909/posts/default/109359289600718811'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6680909/posts/default/109359289600718811'/><link rel='alternate' type='text/html' href='http://magarantham.blogspot.com/2004/08/blog-post_109359289600718811.html' title='தமிழ் உரக்கச்சொல்வோம் உலகுக்கு'/><author><name>மகரந்தம்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://img75.photobucket.com/albums/v228/magaranthampicts/magarantham.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6680909.post-109358997674566423</id><published>2004-08-27T12:15:00.000+05:30</published><updated>2004-08-27T12:29:36.746+05:30</updated><title type='text'>என் சன்னலுக்கு வெளியே </title><content type='html'>புத்தக கண்காட்சி என்றதும் நம் நினைவுக்கு வருவது இரண்டு.&lt;br /&gt;1. பாபாசியின் சென்னை  புத்தக கண்காட்சி&lt;br /&gt;2. நெய்வேலியில் நடைபெறும் புத்தக கண்காட்சி&lt;br /&gt;&lt;br /&gt;சிறு நகரங்களில் இந்த புத்தக கண்காட்சிகள் அவ்வளவாக நடைபெறுவதில்லை. நடைபெறும் இடங்களிலும் புத்தக நிலையத்தாரை தவிர வேறு எவரையும் காண்பதற்கு வாய்ப்பில்லை. எனவே இவை குறிப்பிடத்தகுந்த முக்கியத்துவம் பெறுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் நடைபெற்ற பாபாசியின் புத்தக கண்காட்சியின் விற்பனை அதிகரித்ததையும் பரவலான கூட்டம் கண்காட்சிக்கு வந்திருந்ததையும் காலச்சுவடு போன்ற பத்திரிக்கைகள்  சிலாகித்திருந்தன. சென்னையில் இது சாத்தியமே.அதே போன்று நெய்வேலி. தமிழின் முதன்மை எழுத்தாளர்களிலிருந்து தீவிர வாசகர்கள் வரை அனைவரும் படையெடுத்து புத்தகச் செல்வங்களை அள்ளிச் செல்வர். இது வழக்கமாக ஆண்டு தோறும் நடைபெறுகிற ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் ஒருவர் மூலமாக மயிலாடுதுறை நகரத்தில் புத்தக கண்காட்சி நடைபெறும் விவரம் அறிந்து, வேறொரு நண்பருடன் மயிலாடுதுறை வெண்ணிலா திருமண மண்டபத்திற்கு சென்றிருந்தேன்.&lt;br /&gt;மயிலாடுதுறை ரோட்டரி கிளப் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. 1.8.04 முதல் 8.8.04 முடிய என்ற அறிவிப்பு தாங்கிய துணி விளம்பரம் முதலில் வரவேற்றது.மண்டபத்தினுள் நுழைந்தவுடன் நாசி வாயிலாகப் பாய்ந்து  மனதை அமைதிப்படுத்தியது ஒரு நிறுவனத்தாரின் தயாரிப்பான இன்ஸ்டன்ட் சாம்பிராணி. அப்போதுதான் தெரியவந்தது புத்தகங்கள் மட்டுமன்றி வேறு சில கைவினைப் பொருட்களும் கண்காட்சியில் பங்கு பெற்றிருந்த விவரம்.&lt;br /&gt;நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் வரவேற்பறையிலேயே சாம்பிராணி; விற்பனைக்கும் இடமளித்திருந்தார்கள். நல்;ல முயற்சி.  வருபவர்களை வரவேற்கும் வகையிலும் இருந்தது. வாடிக்கையாளர்களுக்கு தரத்தின் தன்மையை சோதித்துக் காட்டியவாறும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நம் ஊரில் புத்தகத்திற்கு எந்தளவில் வரவேற்பு இருக்கப்போகிறது என நினைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தேன். எனக்கு மகிழ்ச்சியான ஏமாற்றம்.காரணம்,  இளவயதுடைய மாணவ மாணவியரிலிருந்து பள்ளி ஆசிரியர்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் என அனைத்து வகையான பிரிவினைச் சேர்ந்தோரும் புத்தகங்களை மேய்ந்து கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மயிலாடுதுறையின் பிரதான புத்தக நிலையமான “புத்தகச் சோலை” யின் பெரும் பங்களிப்பினை அங்கு காண முடிந்தது .சிறிய புத்தக நிலையமாக சில ஆண்டுகளுக்கு முன் துளிர்விட்டு இன்று சோலையாக வளர்ந்து நிற்கிறது அந்த நிலையம்.“புத்தகசோலை “ நிலையமே ஒரு கண்காட்சி போல் விரிந்து பரவியிருக்கும். சில நாட்களுக்கு முன் கடைக்கு சென்றிருந்த போது பள்ளி, கல்லு}ரிகளின் துவக்க காலமென்பதால் மாணவகண்மணிகளின் ஆக்கிரமிப்புக்குள்ளாகி திருமணம் நடந்து முடிந்த வீடு போல் காட்சியளித்துக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;துறைவாரியாக அடுக்கி வைத்திருந்த புத்தகங்கள் யாவும் கலைந்து போயிருந்தன. கலீல் ஜிப்ரானை தேடினால் கண்ணபிரான் கிடைத்தார், கர்ம வீரரை தேடினால் “காதல் பூமி” கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஓஷோவின் “பதஞ்சலி யோகம் ஒரு விளக்கம”; மூன்று பாகம் கொண்டது. முதல் பாகம் இல்லாமல்  இரண்டாம் பாகம் மட்டுமே கிடைத்தது.வருத்தம் தெரித்துக்கொண்ட புத்தக நிலைய நண்பர் குறைபாடுகள் இரு வாரங்களில் சரிசெய்யப்பட்டுவிடுமென தெரிவித்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று நடைபெற்ற புத்தக கண்காட்சியில் “ புத்தகசோலை” கூடுதல் பத்தகங்களை வரவழைத்திருந்தது.மேலும் துறைவாரியாக புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன.நான் பார்த்துக்கொண்டிருந்த சில மணித்துளிகளிலேயே டாக்டர் அப்துல் கலாமின்  “ அக்னி சிறகுகள்” இரண்டு புத்தகங்கள் விற்பனையாயின. எம்.எஸ். உதயமூர்த்தியின் புத்தகங்கள் பக்கம் மாணவர்கள் கூட்டம் நின்றிருந்தது. அவர்களுக்கு தெரிதிருக்குமோ என்னவோ எம்.எஸ் உதயமூர்த்தியும் மயிலாடுதுறையை சேர்ந்தவர்தான் என்பது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் குடந்தையை மையமாக கொண்டு இயங்கும் சரஸ்வதி புத்தக நிலையம் பக்தி புத்தகங்களை குவித்திருந்தது.மயிலாடுதுறை மற்றும் அதனை சுற்றியுள்ள புராதன கோயில்களின் தலவரலாறு கோயில்களின் மகிமை,பிரதோச வழிபாடு புத்தகங்கள் அதிகமாக காணப்பட்டன “பிரதோச வழிபாடு புத்தகம்” அதிக அளவில் விற்பனையானது.&lt;br /&gt;&lt;br /&gt;ஓஷோவின் “ஜென் தத்துவ விளக்கம்”  “படிப்படியாக தியானம்” “ எளியமுறை தியானம்” “ ஒரு கோப்பை தேநீர்” புத்தகங்களும் “புல் தானாகவே வளர்கிறது” நு}லின் தொடர்ச்சியான “மீண்டும் புல் தானாக வளர்கிறது”  பத்தகங்களும் அதிக அளவில் காணப்பட்டன. அனால் இவ்வகை புத்தகங்கள் பக்கம்  பெரும்பாலோனோரை பார்க்க முடியவில்லை. சிலர் புரட்டி கூட பார்க்கவில்லை. நகைச்சுவை தொகுப்புகள், உடற்கூறு குறித்த மருத்தவர்களின் தரமான புத்தகங்கள் ஓரளவுக்கு விற்பனையாயின.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக மருத்துவ புத்தகங்களின் விலை அதிகமாயிருந்தது. விற்பனை குறைவுக்கு, விலை ஒரு காரணமாய் இருக்கலாம். தமிழ் சார்ந்த நு}ல்களும், கவிதை தொகுப்புகளும்  அதிக அளவில்  விற்றுபோயின. எனினும் தன்னம்பிக்கையூட்டும் கட்டூரைகளும் , நாவல்களும் அதிக அளவில் விற்பனையானது  என்பதை பின்னர் அறிந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தொலைகாட்சி ஊடகங்களோடு இரண்டற கலந்து விட்ட இன்றைய வாழ்க்கையில் சி.டி.  டி.வி.டி .எப.; எம்  இன்டர்நெட் இவைகளில் நேரம் செலவழிப்பதையே இளைய தலைமுறையினர் நாகரிகமாக கருதுகின்றனர்.&lt;br /&gt;இத்தகைய சூழலில்  புத்தகங்கள் பக்கம் மீண்டும் மோகம் திரும்ப துவங்கியிருப்பதாகவே நான் எண்ணுகிறேன். அது சரியெனும் பட்சத்தில்  ஆரோக்கியமான வரவேற்கத்தக்க  மாற்றம்  சமூதாயத்தில் ஏற்படுத்தும்.&lt;br /&gt;ஏனெனில் நவீன விஞ்ஞான வசதிகளோடு செலவழிக்கும் பெரும்பாலோர் நுனிப்புல் மேயும் வகையில் மேலோட்டமாகவே ஈடுபடுகின்றனர். எளிய உதாரணம், இணையதளத்தில் உலவுதல். இவை நல்ல விஷயங்களை மனதில் பதிக்க உதவாது அத்தகைய வலிமை வாய்ந்த தன்மை புத்தகங்களில் தான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் தான் ஆரம்ப பள்ளி காலம் முதல் மேற்படிப்பு வரையிலும் கல்வியில் புத்தகத்தின் பங்கு அளப்பறியதாக இருக்கிறது. ஏனெனில் புத்தகங்கள் மட்டுமே மனத்தின் ஆழத்தில்  நுணுக்கமான செய்திகளை பதிய செய்யும் வல்லமை கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, இது போன்ற புத்தக கண்காட்சிகள் நடத்துவது முலமாக பலரை பயன் பெறச் செய்ய முடியும். சிந்திக்கும் வல்லமையை வரப்பிரசாதமாக கொண்ட மனிதன், புத்தகங்கள் மூலம் கிடைக்கும் அறிவைப்  பயன் தரும் வகையில் பயன்படுத்தினால் சமுதாயத்தின் பிணக்குகளை எளிதில் தீர்க்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, சிறு நகரங்கள் துவங்கி கிராமங்கள் வரை புத்தகம் எனும் விருட்சத்தின் விதைகள் விழ வேண்டும். அவை தளிர்விட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;- ஆதி&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6680909-109358997674566423?l=magarantham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6680909/posts/default/109358997674566423'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6680909/posts/default/109358997674566423'/><link rel='alternate' type='text/html' href='http://magarantham.blogspot.com/2004/08/blog-post_27.html' title='என் சன்னலுக்கு வெளியே '/><author><name>மகரந்தம்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://img75.photobucket.com/albums/v228/magaranthampicts/magarantham.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6680909.post-109358687149000989</id><published>2004-08-27T11:16:00.000+05:30</published><updated>2004-09-03T17:59:42.263+05:30</updated><title type='text'>கானல் நீரா? கண்ணீரா?</title><content type='html'>&lt;em&gt;இருபுறமும் வளர்ந்திருக்கும், கோரைகளையும் வளைந்திருக்கும் நாணல்களையும் தாலாட்டிக்கொண்டே புது வேகம் கொண்டு பிரவாகம் எடுக்கும் நதி. தன் சங்கமத்தை காணப்போகும் ஆவலில் அது எழுப்பும் ஓசை இனிமையான சங்கீதம். உடன் பிறந்த சகோதரனை பார்ப்பது போன்ற மகிழ்ச்சியில் து}ரத்திலிருந்து கையசைக்கும் நெற்ப்பயிர்கள்.&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;கரைகளின் இருபக்கங்களிலுமுள்ள படிக்கட்டுகளை தாண்டும் வகையில் உயரே எழும்பும் நீர் அலைகள். மகிழ்வாய், ஜாக்கிரதை உணர்வுடன் குளிக்கும் பெரியவர்கள். படிகளில் கால்வைக்கும் குழந்தைகளை கரைக்கு விரட்டும் பெண்கள்; பாலத்தின் மேலிருந்து கரணம் அடித்து நீரினுள் பாயும் இளம் காளைகள். அவர்கள் தண்ணீரில் குதிக்கும் அழகை கண்டும் காணாதது போல் அவர்களை கள்ளத்தனமாய் ரசிக்கும் கன்னிப்பெண்கள் ... &lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;இது ஒரு சிறு கதையின் துவக்கம் என்று நினைத்தால் நீங்கள் கண்டிப்பாய் ஏமாந்து போவீர்கள். பின் மேலே சொன்னவை அனைத்தும் கனவுகள் நிறைந்த கற்பனையா என்றால், அதுதான் இல்லை. அவை அனைத்தும் துளியும் கலப்படமில்லாத 100 சதவீத உண்மைச்சம்பவங்கள். உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் நடந்ததா என்றால் அதுவும் இல்லை.சோழவள நாட்டில் சீரும் சிறப்பாக ஓடிய காவிரியாற்றின் கரையில் நடந்தவைதான் அவையனைத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;மயிலாடுதுறையில் பிறந்து வளர்ந்தவன் என்பதால் காவிரியாற்றோடு நெருங்கிய பரிச்சயமுள்ளவன் என்ற முறையில் நான் கண்டவைதான் இவை. துவக்கப்பள்ளி காலத்திருந்தே காவிரியின் அழகை அணு அணுவாய் ரசித்தவன் நான். இருபது வருடங்களுக்கு முன்னால் அது கரைபுரண்டோடும் அழகை பார்த்து மெய் மறந்து நின்று, அப்பா அடித்த பின்னர் கரையேறியது இன்னும் மறக்க முடியவில்லை. அதுவும் அணை திறந்த பின்னர் புது வெள்ளமாய் பாய்ந்து வரும் காவிரி தான் எத்தனை அழகு? வரும் வழியில் எதிர்படும், சிறுமரங்கள், செடி கொடிகள் வண்ணமலர்கள், சில நேரங்களில் இறந்து போன கால்நடைகள், பிற உயிரினங்கள் என வெள்ளத்தில் அடித்துச்செல்வதைக் காணும் போது, வாழ்வியல் உண்மைகளை அது உரைத்துச் செல்வதாகத்தான் எனக்கு பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளி நாட்களின் கோடைவிடுமுறையில் மாலைப்பொழுதுகள் தற்காலிகமாய் வறண்டு போயிருக்கும் காவிரி கரையில் தான் இன்பமாக கழியும். உறவினர் வீட்டு சிறுவர்களுடன் விளையாட்டுகள், விடுகதைகள், கதைகள் என சுவாரஸ்யமான சம்பவங்கள் அங்குதான் அரங்கேறும். மெல்ல, மெல்ல இருள் கவ்வ தொடங்குகையில் எச்சரிக்கை குரல் எழுப்பி வீட்டிற்கு அழைக்கும் பெரியப்பாவின் குரல் கேட்டதும் நிமிடத்தில் குது}கலம் கரைந்துபோகும். எத்தனை நாட்கள் ஏக்கத்துடன் திரும்பி திரும்பி காவிரியை பார்த்துக்கொண்டு பெரியப்பாவின் ஆதரவு கரம் பிடித்து நடந்து வந்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆடிப்பதினெட்டு வந்தால் பூப்பெய்திய கன்னிப்பெண்ணைப்போல் துள்ளலுடன் காவிரி கடந்து போவதை பார்ப்பதே அழகு. கரையின் இருபுறமும் சிறுவர்கள் சப்பரதட்டி செய்து வண்ணக்காகிதங்கள் ஒட்டி இழுத்துச்செல்வார்கள். குமரிப்பெண்கள் அதிகாலையில் நீராடி மஞ்சள் கயிறு அனிந்து கொள்வர். பச்சரிசியும் வெல்லமும் அனைவருக்கும் விநியோகிக்கப்படும்&lt;br /&gt;&lt;br /&gt;ஐப்பசி மாதத்தில் கடைமுகத்தின் போது மயிலாடுதுறையில் துலாக்கட்டம்,திருவிழா களை கட்டியிருக்கும், துலா உற்சவத்தை காணபதற்காகவே ஊரிலிருந்து வந்திருக்கும் உறவினர் கூட்டம்.&lt;br /&gt;கும்மாளமும் குதுகலமுமாய் கரைந்த நாட்கள். மகாதான தெருவை அடைத்து ஆக்கிரமித்திருக்கும் முழுக்கு கடைகள். அவைகளிடையே பொருட்கள் வாங்குவதற்காக அலைமோதும் கூட்டத்தில், ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்துத்தான் முன்னேற முடியும் இப்போதைய மாம்பலம் ரெங்கநாதன் தெருவை விட அதிக சன நெரிசலில் மகாதான தெரு இருமாதங்களுக்கு திளைத்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு ? எதுவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில் எல்லாவற்றிற்கும் சப்தநாடியான காவிரி உயிர் நாடி ஒடுங்கி போய் காட்சியளிப்பதுதான். காவிரியில் முழங்கால் அளவேனும் தண்ணீரை பார்த்தே பல வருடங்களாகி விட்டன. வெறுமையாய் காத்திருக்கும் மணற்;பரப்புதான் நம்மை வரவேற்கிறது . நடுவே பரவியுள்ள புதர்கள், காடுகளாய் மண்டியிருக்கும் செடி கொடிகள், என பரிதாபமாய் காட்சி தருகிறது காவிரி.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு காவிரி மட்டும் வற்றவில்லை. அதனையே நம்பியிருந்த கோடிக்கணக்கான வேளாண் குடும்பங்களின் வாழ்க்கையும் தான். வெகு இலகுவாக கிடைத்து வந்த நல்ல தண்ணீர் பல அடிகளுக்கு கீழே இறங்கி விட்டது. காவிரிப் படுகையில் இப்படியொரு அவலம் இதற்கு முன் நிகழ்ந்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பயிர்களை விதைக்க வேண்டிய விவசாய சகோதரர்கள் வேதனையை விதைத்து துன்பத்தை அறுவடை செய்கிறார்கள். பசுமையாக காட்சியளித்த தஞ்சை கிராமங்கள் வறண்டு வறட்சியின் சுவடுகளாய் காட்சியளிக்கின்றன.&lt;br /&gt;குலத்தொழிலாய் செய்து வந்த வேளாண் தொழிலை விடுத்து பலர் கூலித் தொழில்களுக்கு மாறிவிட்டனர். வேறு மாவட்டங்களிலிருந்து விவசாய கூலிகலாக மக்கள் இங்கு வந்த காலம் போய், டெல்டா விவசாயிகள் வேறு மாநிலம், மாவட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் அவல நிலையும் தொடர்கிறது. கடந்த பல ஆண்டுகளாக உழவர் திருநாள் தஞ்சை மண்டலத்தில் கொண்டாடப்படவிலலை. இலவச சாப்பாடு வழங்கும் திட்டம் மாநில அரசால் கொண்டுவரப்பட்ட போதும் அதில் பயனடைவதை தன் மானத்திற்கு இழுக்கு என்று கருதியவன் தஞ்சை விவசாயி. அரசியல்வாதிகளின் கண்ணாமுச்சி நாடகத்தால் தன் வயிறு சுருங்கி நிற்கிறது வேளாண் குடும்பங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கர்நாடக மாநில அரசோ உபரி தண்ணீரை திறந்து விடுவதற்கே கூட பல முறை யோசிக்கிறது. வெள்ள அபாயம் ஏற்பட்டால் மட்டுமே கபினி அணை திறக்கப்படுகிறது. கர்நாடக மாநில விவசாயிகளுக்கும் தண்ணீர் தேவைதான் என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. நடுவர் மன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டவாறு தண்ணீர் திறந்து விட மனமில்லை என்றாலும் அதில் மிகக்குறைந்த அளவையாவது திறந்து விட்டால் ஓரளவுக்கு நிலையை சமாளிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நிலைமை இவ்வாறிருக்க தமிழ் மாநில ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் எழுப்பும் வீண் பிரச்சனைகளால் கர்நாடகம் கொதித்துப் போகிறது. மொழி வாரியான பிளவை ஏற்படுத்த இரு தரப்பிலும் சிலர் செய்யும் சதி வேலைகளால் பிரச்சனை தகிக்கவே செய்கிறது. இந்நிலையில் கர்நாடக விவசாயிகளின் ஒத்துழைப்பின்றி காவிரியில் நாம் நீர் பெறுவது என்பது இயலாத ஒன்று. அது நம் துர் அதிர்ஷ்டமானாலும் கூட. ஆனால் அதுதான் உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, இரு மாநில விவசாயிகளின் சுமுகமான பேச்சுவார்த்தையின் முலமாகவே இப்பிரச்சனைக்கு உரிய தீhவு காண முடியும். காவிரிக்காக பாடுபடுவேன் என்று முழங்கும் அரசியல்வாதிகள் இப்பிரச்சனைக்கு எவ்வகையிலும் தீர்வு கிடைத்து விடக்கூடாது என்பதில் மும்முரமாக உள்ளனர். இதை விடுத்தால் ஓட்டு வங்கி பாதிப்படையும் என்ற கவலை அவர்களுக்கு. அவர்கள் இப்பிரச்சனையில் ஒதுங்கியிருந்தாலே பாதியளவில் பிரச்சனைகள் தீர்ந்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;“நாற்காலியில் அமரத்துடிக்கும் நடிகர்களாகட்டும்; நாற்காலியில் அமர்ந்து நடிப்பவர்களாகட்டும் காவிரியின் துயரத்தை நேரில் வந்து காணுங்கள். விவசாயிகளின் அவலங்களைக் காணுங்கள். அவர்களின் வாழ்நிலையை உணருங்கள். அதை விடுத்து உங்கள் சுய நலங்களுக்கு இப்பிரச்சனையை எழுப்பி சுய லாபம் தேட முனையாதீர்கள்;. குளிர் சாதன அறையினுள் அமர்ந்து கொண்டு காகித அறிக்கைகள் விடுப்பதை விட்டு வெளியே வாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;காவிரியோடு வாழுங்கள். காவிரியை சுவாசியுங்கள். அதன் வேதனையை அப்போதுதான் உங்களால் உணர முடியும்” என்று வேதனையுறுகிறான் கடைமடை விவசாயி.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதேனும் செய்தே ஆக வேண்டிய காலகட்டம் இது. இப்பிரச்சனையை கண்டு கொள்ளாமல் விடப்பட்டால் வருங்கால சந்ததியினருக்கு காவிரியின் சுவடுகளை சுட்டிக்காட்டுவதற்கு மணற்பரப்புகள் கூட மறைந்து போய் கான்கீட் காடுகள்தான் காட்சியளிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பல குடும்பங்களுக்கு தொல்காப்பிய காலத்திற்கு முன்பிருந்து உயிரளித்த காவிரி இன்று தன் ஊற்றுக்கண்கள் அடைபட்டு உயிர் தண்ணீருக்காக போராடிக் கொண்டிருக்கிறாள். சீக்கிரம் யாரிடமாவது சொல்லுங்கள். ஏதாகிலும் செய்யச் சொல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தியாகன்&lt;br /&gt;மயிலாடுதுறை &lt;a href="http://groups.yahoo.com/group/mylguys91_93/post?postID=eibHB-x1WDOHN9aTAhlgyjGZulwVh-U07hm2U0x0cKnlivcclLu0fYNcYAmNnMnwPSyRiSakDRYY9aj-0hOuuCU"&gt;raj_thia2001@yahoo.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6680909-109358687149000989?l=magarantham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6680909/posts/default/109358687149000989'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6680909/posts/default/109358687149000989'/><link rel='alternate' type='text/html' href='http://magarantham.blogspot.com/2004/08/blog-post.html' title='கானல் நீரா? கண்ணீரா?'/><author><name>மகரந்தம்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://img75.photobucket.com/albums/v228/magaranthampicts/magarantham.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6680909.post-108548944955534766</id><published>2004-05-25T18:19:00.000+05:30</published><updated>2004-05-25T18:20:49.556+05:30</updated><title type='text'>மொழிபெயர்ப்பு சிறுகதை - மூன்று ஆன்மாக்கள்</title><content type='html'>செயிண்ட் ஆண்ட்ரூஸ் தீவிலிருந்து புறப்பட்ட மத போதகர்களின் கூட்டம் காலபாகஸ் தீவுக்கப்பால் இருந்த ஒரு சிறு தீவின் கரையோரம் இளைப்பாறுவதற்காக ஒதுங்கி நின்றது. படகில் இருந்து இறங்கியதும் கூட்டத்தின் கண்ணில் பட்டது அந்த மூன்று பேர்.  தோல் சுருங்கி, கண்கள் சிறுத்து, வெண்தாடி தரையில் புரண்டும், தட்டுத் தடுமாறி தள்ளாடி வந்ததே அவர்கள் வாழ்க்கையின் விளிம்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் வயதினர் என்பதைக் காட்டி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னந்தனியான தீவில் வேறு யாரையும் காண முடியாத பாதிரியார்களின் கூட்டம், அந்த மூத்த வயதோர்களை இப்போது பிரமிப்பாக பார்த்தது. மொழிப் பிரச்சினை எட்டிப் பார்த்தாலும் சைகை மொழி கைகொடுத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;'உங்களோட தினசரி வேலைகள் என்னென்ன?'&lt;br /&gt;&lt;br /&gt;'உண்பதும் உறங்குவதும்தான்'&lt;br /&gt;&lt;br /&gt;'கடவுள் வழிபாடு உண்டா?'&lt;br /&gt;&lt;br /&gt;'எப்போதாவது, தேவைப்படும் நேரத்தில்'&lt;br /&gt;&lt;br /&gt;'எப்படி வழிபடுவீர்கள்?'&lt;br /&gt;&lt;br /&gt;'மனதிற்கு தோன்றிய வகையில்'&lt;br /&gt;&lt;br /&gt;எரிச்சலான பாதிரியார்கள் கூட்டம் வழிபாட்டு முறை பற்றி அவர்களுக்கு பாடம் எடுக்க ஆரம்பித்தது. ஆண்டவனை எவ்வாறு முழந்தாளிட்டு, கைகூப்பி வணங்கி நம் பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டு... ஆண்டவரே எம்மை ரட்சிக்கவேண்டும் என்று ஜெபித்து வணங்க வேண்டும் என்று சொன்னதோடு நின்றுவிடாமல் சில வசனங்களை போதித்து இனியாவது முறையாக வணங்கும்படி அவர்களை கேட்டுக் கொண்டது கூட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;தினந்தோறும் பிரார்த்தனைகள், உபதேசங்கள் என்று ஒரு வாரம் கழிந்தது.  முதியவர்களும் வழிபாட்டு முறையில் கற்று தேர்ந்துவிட்டதாக நினைத்த பாதிரியார்களின் கூட்டம் அவர்களிடமிருந்து விடைப் பெற்றுக் கொண்டு அடுத்த இலக்கை நோக்கிய நெடிய பயணத்துக்கு தயாரானது.&lt;br /&gt;&lt;br /&gt;படகுகள் கரையிலிருந்து விடை பெற்றுக் கொண்டிருக்கும்போதுதான் தலைமை பாதிரியாரின் கண்ணில் அந்த காட்சி தென்பட்டது. அந்த மூன்று முதியவர்களும் சர்வ சாதாரணமாக அலை மோதும் கடலின் நடுவே தலைதெறிக்க ஓடி வந்து கொண்டிருந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;'குருவே, நீங்கள் சொல்லிக் கொடுத்த போதனைகளை மறந்து விட்டோம். எனவே தயவு செய்து திரும்பவும் ஒருமுறை சொல்லித் தரமுடியுமா?'&lt;br /&gt;&lt;br /&gt;ஆச்சரியமான கூட்டத்தை அமைதிப்படுத்திவிட்டு தலைமை பாதிரியார் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;'அது இருக்கட்டும். முதலில் தண்ணீரின் மீது நடக்கும் வித்தையை நீங்கள் எப்படி கற்றுக் கொண்டீர்கள் என்பதை சொல்லுங்கள்?'&lt;br /&gt;&lt;br /&gt;'அது ஆண்டவனுக்குத்தான் தெரியும். உங்களை எப்படியாவது தேடிக் கண்டுபிடித்து நீங்கள் சொன்ன போதனைகளை திரும்ப கேட்க வேண்டுமென்று ஆசைப்பட்டு ஆண்டவனை பிரார்த்தனை செய்தோம்... அப்படியே நடந்தது'&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டவனின் புகழை பரப்ப தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த அந்த தலைமை பாதிரியாரின் தலைகுனிந்து நின்றார். &lt;br /&gt;&lt;br /&gt;'நான்தான் தவறு செய்துவிட்டேன். நீங்கள் கடவுளின் அருளை முழுமையாகப் பெற்றவர்கள். உங்களுக்கு போதனைகள் எதுவும் தேவையில்லை. உங்களது வழக்கமான முறையிலேயே ஆண்டவனை பிரார்த்தனை செய்யுங்கள்'&lt;br /&gt;&lt;br /&gt;வந்தவர்களும் வணங்கி, விடைபெற்று சென்றவுடன் தனது கூட்டத்தினரை பார்த்து சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஆண்டவனின் அருளைப் பெற அன்பும், நல்ல ஆத்மாவுமே போதும்.  வெற்றுப் போதனைகளும் பிரச்சாரங்களும் தேவையேயில்லை'&lt;br /&gt;&lt;br /&gt;கர்மாக்களின் மூலம் ஆன்மாக்களை தூய்மைப்படுத்துவதுதான் உண்மையான ஆன்மீகம் என்பதை உணர்ந்து கொண்ட கூட்டத்தின் மனநிலையை அறிந்த படகு துடுப்புகளும் தாய்நாட்டின் திசைநோக்கி நகர ஆரம்பித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;லியோ டால்ஸ்டாயின் சிறுகதை தொகுப்பிலிருந்து... தமிழில் மாறன். &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6680909-108548944955534766?l=magarantham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6680909/posts/default/108548944955534766'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6680909/posts/default/108548944955534766'/><link rel='alternate' type='text/html' href='http://magarantham.blogspot.com/2004/05/blog-post_108548944955534766.html' title='மொழிபெயர்ப்பு சிறுகதை - மூன்று ஆன்மாக்கள்'/><author><name>மகரந்தம்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://img75.photobucket.com/albums/v228/magaranthampicts/magarantham.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6680909.post-108548922936765366</id><published>2004-05-25T18:14:00.000+05:30</published><updated>2004-05-25T18:17:09.366+05:30</updated><title type='text'>கவிதை - இருள் கவ்வும் நேரம்</title><content type='html'>கானகம் அமைதியாயிருக்கிறது.&lt;br /&gt;மான்கள் துள்ளி விளையாடத் &lt;br /&gt;துவங்கிவிட்டன.&lt;br /&gt;நிலப்பரப்பெங்கும் காணப்பட்ட&lt;br /&gt;எலும்பு புதையல்கள்&lt;br /&gt;இப்போதில்லை.&lt;br /&gt;மரண ஓலமும் இப்போது&lt;br /&gt;கேட்கவேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பருத்த மரங்களின் &lt;br /&gt;பரந்த கிளைகளில்&lt;br /&gt;வானம்பாடிகள்!&lt;br /&gt;தெளிந்த நீர்நிலைகளில் &lt;br /&gt;தெரியாமல் அலையும் &lt;br /&gt;நீர்ப்பூச்சிகள்!&lt;br /&gt;&lt;br /&gt;கானகம் இவ்வளவு &lt;br /&gt;இயல்பாய் இருக்குமா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதுதான் தெரிகிறது &lt;br /&gt;பேரழகும், பேரமைதியும்!&lt;br /&gt;&lt;br /&gt;மான்கள் மட்டுமல்ல பூனைகளும்&lt;br /&gt;மகிழ்ச்சிக் களியாட்டத்தில்!&lt;br /&gt;&lt;br /&gt;அமைதிப்பூங்கா ஒரு &lt;br /&gt;அர்த்த சாமத்தில்&lt;br /&gt;சிதைந்து போனது.&lt;br /&gt;&lt;br /&gt;வானமே அதிரும் வண்ணம் &lt;br /&gt;ஓசையும் வந்தது&lt;br /&gt;கிழக்குப் பக்கமிருந்து!&lt;br /&gt;&lt;br /&gt;கானகமெங்கும் ரத்தவாடை&lt;br /&gt;மீண்டும்&lt;br /&gt;நாசிகளைத் தாக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;துள்ளி விளையாடும் அந்த&lt;br /&gt;மான்களுக்கு தெரிந்திருக்குமா?&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கத்தின் வரவு மீண்டும்&lt;br /&gt;இருக்குமென்று?&lt;br /&gt;&lt;br /&gt;- ருத்ரன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6680909-108548922936765366?l=magarantham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6680909/posts/default/108548922936765366'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6680909/posts/default/108548922936765366'/><link rel='alternate' type='text/html' href='http://magarantham.blogspot.com/2004/05/blog-post_108548922936765366.html' title='கவிதை - இருள் கவ்வும் நேரம்'/><author><name>மகரந்தம்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://img75.photobucket.com/albums/v228/magaranthampicts/magarantham.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6680909.post-108548878280515261</id><published>2004-05-25T18:08:00.000+05:30</published><updated>2004-05-25T18:09:42.806+05:30</updated><title type='text'>பெண்களின் கால்களில் பூட்டிய விலங்குகள்</title><content type='html'>“வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற விந்தை மாந்தர் தலை கவிழ்ந்தார்” என்றான் பாரதி.  அறிவியலில் வியத்தகு சாதனைகளைப் பெண்களும் செய்த பின்னரும் பெண்ணிணத்தை அடிமையாகக் கருதும் போக்கு முற்றிலுமாக நீங்கி விடவில்லை என்பதுதான் வலிக்கின்ற உண்மை.  பெண்களுக்கெதிரான கொடுமைகள் குறித்த இந்தியா டுடே புள்ளி விவரம் தெரிவிக்கின்ற தகவல் கவலையளிப்பதாகவே இருக்கிறது.(இந்தியா டுடே இதழ் - மே 2004).&lt;br /&gt;	&lt;br /&gt;இந்திய சுதந்திரத்திற்கு முன்பிலிருந்து இன்றுவரை பெண் ஒரு  பாலியல் நிவாரணியாக  மட்டும்தான் கருதப்படுகிறாள். முன் காலத்தில் நம் நாட்டில் சதி கொடுமை (கணவன் இறந்த பின் மனைவி உடன் கட்டை ஏறுதல்)வழக்கத்தில் இருந்தது. அதாவது ஒரு பெண்ணின் கணவன் இறந்து விட்டால் அவள் அதன் பின் உயிர் வாழுதல் இச்சமுதாயத்தால் ஏற்றுகொள்ளப்படவில்லை. அதனால் அவள் தன் கணவனுடன் தன்னையும் எரித்துக்கொள்ளவேண்டும், அது அவளுக்கு விருப்பம்; இல்லாவிட்டாலும் கூட.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, பெண்ணின் பிறப்பு என்பது ஒரு ஆணின் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டும்தான், அதன் பின் அவள் உயிர் வாழுதல் தேவையற்றதாக கருதப்பட்டிருக்கிறது. மேலும் பெண் என்பவள் வேறு வேலைகளுக்கு உபயோகமில்லாதவள் என்றும் கணவன் இறந்த பின் உயிர் வாழ்தல் கற்பிற்கு களங்கம் என்றும் பழங்காலத்தில் மிக மோசமான நிலை நிலவியிருக்கின்றது. அன்றே பெண் குலம் எழுச்சி கொண்டிருக்கவேண்டும!&lt;br /&gt;&lt;br /&gt;பெண்கள் எப்போதும் சமுதாயத்தில் இரண்டாம்  நிலையினராகத்தான் கருதப்பட்டு வந்துள்ளனர். ஆனால் ஒவ்வொரு ஆணுக்கும் கண்டிப்பாக ஒரு பெண்துணை வேண்டும்  ஆதிகாலத்தில் பெண்களுக்கு மணமகன் வீட்டார் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து கொண்டார்கள் என்ற செய்தி நம்மை வியப்படைய வைக்கின்றது. சமுதாயத்தில் ஆணுக்கு இணையாக பெண்களின் பாலின விகிதம் சமமாக இருக்கவில்லை. விகிதம் வெகுவாக குறைந்தே உள்ளது. அதன்படி பெண்களுக்கு இந்நாட்டில் மதிப்பு அதிகமாக இருக்க வேண்டும். ஆனால் நிலைமை இங்கு தலை கீழ்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்களின் வாழ்வில் பெண் சரி பாதி என்பதெல்லாம் வெறும் பேச்சளவிலும் ஏட்டளவிலும்தான். பெண் என்பவள் ஆண்களின் உணர்ச்சிகளுக்கு இறையாகும் பலியாடு அவ்வளவுதான்.இப்படி நிகழ்ந்திருக்கும் நிகழ்ந்து கொண்டிருக்கும் பெண் கொடுமைகளுக்கு இந்தியாவில் குறைவேதும்; இல்லை. குறிப்பாக, ஒவ்வொரு 54 நிமிடத்திற்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள் என்கிறது ஒரு புள்ளி விபரம்.&lt;br /&gt; &lt;br /&gt;காதல் என்ற போர்வையில் ஏமாற்றப்பட்ட பெண்களின் நிலையோ இன்னும் மோசம், கற்பில் களங்கம் ஏற்பட்ட பெண்ணை வீட்டில் வைத்திருந்தால் அவமானம் என்றெண்ணி அவளை கொல்லவும் அவளது வீட்டாரே துணிகின்ற அவலமும் தமிழ்நாட்டிலும் உண்டு. ஆனால் ஆண் மகன்(காதலன்) எந்த வித குற்ற உணர்வுமின்றி சமூகத்தில் சுதந்திரமாக செயல்பட முடிகின்றது. அப்பெண் செய்த பாவம் தான் என்ன?அவள் சமூகத்தில் நியாயம் கோரினால் மிஞ்சுவது கேலியும்  அவமானமும் தான். இப்படி சமுதாயத்தால் வஞ்சிக்கப்பட்டவள் முடிவாக மாண்டு போவதை தவிர வேறுவழியொன்றும் இல்லையென்றென்ணுகிறாள். இப்படி இறக்கும் பெண்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;திருமணம் - வியாபாரம். பெண்ணை பார்க்க வருபவர்கள்(மாப்பிள்ளை வியாபாரிகள்) முதலில் “பொன்னை” கேட்டு விட்டுத்தான் பெண்ணை பார்க்கின்றார்கள், அப்போதே அவள் தாம் இரண்டாம் தரமாக்கப்பட்டதை உணர்கிறாள். இந்த திருமண வியாபாரத்தில் பெண் எப்போதுமே விலை போகாத பொருள். இப்படி விலை போட்டு மாப்பிள்ளை வாங்கினாலும் வீண்பழிகள் எல்லாம் பெண்ணுக்குத்தானே. இங்கு இவளுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் அதிகமாக்கப்படுகிறது. வீட்டுக்குள்ளேயே சிறைவைக்கப்படுகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;திருமணத்திற்குப் பின் கணவனை இழந்த இளம் கைம்பெண்களின் நிலை  விவரிக்க இயலாதது. அவர்கள் புதிய வண்ண ஆடை அணிகலன்கள் அணிந்து கொள்வது முதல் திலகமிடுவது வரை அனைவராலும் ஏன் படித்தவர்களாலும் விமர்சிக்கப்படுகிறது.  இவர்களின் முதுகுக்குப்பின்னால் கேட்கும் விமர்சனங்களுக்கு அளவேதும் இல்லை.  மனைவியை இழந்த ஆண் “குழந்தைகளின் எதிர்காலம் கருதி” மறுமணம் செய்து கொள்ளலாம். அதையே ஒரு இளம் விதவை செய்து கொள்ளும் மறுமணத்தை இந்த சமுதாயம் ஏற்றுக்கொள்வதில்லை. உடல் தேவைகளுக்காக பெண் ஆசைப்படுவதாக பாழாய்ப்போன சமுதாயம் கொச்சைப்படுத்துகிறது. கணவனை இழந்த பெண் என்பவள் எல்லாவற்றையும் இழந்தவளாகிறாள் தன் உயிரைத்தவிர.  ஆனால் மனைவியை இழந்த கணவன் தன்னிடமிருந்து எதையும் இழப்பதில்லை. மறுமணத்திற்கு பெண் தேடுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;“உனக்குப்பிறகு உன் தங்கையோடு வாழ வைக்கிறார்கள் என்னை&lt;br /&gt;எனக்குப்பிறகு என் நினைவுகளோடு வாழ வைக்கிறார்கள் உன்னை “&lt;br /&gt;&lt;br /&gt;என்ற வேதனையான கவிதை வரிகளே நினைவுக்கு வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பெற்றோர்களே தங்களின் குழந்தைகளை இரு விதமாக பார்ப்பதுண்டு. ஆண் குழந்தைகள் தங்களின் குலத்திற்கு பெருமை சேர்ப்பதாகவும் பெண் குழந்தைகள் தங்கள் சொத்துக்களை அழிக்கப்பிறந்தவர்கள் என்றும் கருதுகின்றனர். இதனால் ;வீட்டில் ஆண் குழந்தைகள் செல்லமாகவும், பெண் குழந்தைகள் வேண்டாத சுமைபோலவும் வளர்க்கின்றனர்.இப்பெண் குழந்தை தன் உடன் பிறப்பான சகோதரனை கண்டு  தானும் இவனைப்போல் இருக்க முடியவில்லையே என எண்ணி ஏங்குகிறாள். அப்போதே அவளினுள் தாழ்வு மனப்பான்மை புகுந்து விடுகிறது. ஒரு பெண் உடைந்து போக ஆரம்பிக்கும் தருணமும் அதுதான். ஆங்கிலத்தில் சொல்வதென்றால் (Breaking Point Begins)&lt;br /&gt;	&lt;br /&gt;ஒரு பெண்ணின் பிரச்சனைகள் அவள் பிறப்பதிலிருந்து துவங்குகின்றன. பள்ளிப்பருவத்தில் அவளுடைய வளர்ச்சிக்கு இணையாக பிரச்சனைகளும் வளர்கின்றன. திருமணமாகி அவள் மனைவியாக , தாயாக , மாற்றம் பெறும்போது அவை உச்சத்தை நோக்கி செல்கின்றன. பல்வேறு பிரச்சனைகளால் அல்லலுறும் பெண்கள் மன அழுத்தத்தையும் அதன் காரணமாக பல நோய்களையும் பெறுகிறார்கள். குறிப்பாக அலுவலகத்தில் பணியாற்றும் பெண்கள் அளவில்லாத பாவம் செய்தவர்கள்.  தினசரி இல்ல கடமைகளை செய்து முடித்து கணவணையும் குழந்தைகளையும் அனுப்பி விட்டு அலுவலகப்பணிகளையும் கவனிக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகின்றனர்.  இவர்களில் பலர் அலுவலக வேலையில் ஈடுபாடு கொள்ளவும்  குடும்பத்தினரின் அன்பைப் பெறவும் தவறுகின்றனர்.இள வயதிலேயே பல நோய்களுக்கும் ஆளாகின்றனர்.அவர்களுக்கான உதவிகளைச் செய்திட இந்த சமுகம் முன்வரவில்லையென்றாலும ;கேலி செய்வதையும், கடும் விமர்சனங்கள் செய்வதையும் தவிர்க்க வேண்டும் .உலகளவில் பெண்மையைப் போற்றும் நாடு என்று நமது பாரதத்திற்கு ஒரு பெயர் உண்டு. ஆனால் இங்கு புரையோடிருக்கும் உண்மை வெளியில் தெரியும் முன்னர் அதனை சரிசெய்து  காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு இந்தியனுக்கும் இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;						- நெடுமாறன் &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6680909-108548878280515261?l=magarantham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6680909/posts/default/108548878280515261'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6680909/posts/default/108548878280515261'/><link rel='alternate' type='text/html' href='http://magarantham.blogspot.com/2004/05/blog-post_108548878280515261.html' title='பெண்களின் கால்களில் பூட்டிய விலங்குகள்'/><author><name>மகரந்தம்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://img75.photobucket.com/albums/v228/magaranthampicts/magarantham.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6680909.post-108548845076380991</id><published>2004-05-25T17:59:00.000+05:30</published><updated>2004-05-25T18:39:43.830+05:30</updated><title type='text'>கொத்தமல்லி இட்லியும் கொத்து புரோட்டாவும்!</title><content type='html'>&lt;strong&gt;திரை விமர்சனம் - ஆட்டோகிரா·ப் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கால ஓட்டத்தில் மனித மனங்களில் புதையுண்டு போன இனிப்பான தருணங்களை தட்டியெழுப்பி தமிழ் மக்களுக்கு ஒரு திரைக்காவியத்தை தந்திருக்கிறார்கள்.  ஆட்டோகிராப்!&lt;br /&gt;&lt;br /&gt;காதலையும் நட்பையும் கண்ணியமாக காமிரா சுருளுக்குள் சிறைப்படுத்தி சின்ன வயது ஞாபகங்களை வயது வித்தியாசமின்றி அசை போட வைத்ததில் இயக்குனர் சேரனுக்கு முழுமையான வெற்றி.  ஒரு நல்ல திரைப்படம் என்பது படம் பார்த்த பின்பும், நடக்கும்போதும், பேசும்போதும் நினைவலைகளாக நெஞ்சக்கூட்டில் மோதி நம்மோடு வாழ்க்கை முழுவதும் பயணிக்கவேண்டுமூ. பாசாங்கில்லாத காட்சியமைப்புகளும் தாயை தேடும் கன்றுக் குட்டி போல உற்சாக ஊற்றாய் கேரளத்து பின்னணியில் ஒரு கவிதையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பழைய ஞாபகங்களை அடிக்கடி கிளறியபடி மெலிதாகப் பேசும் செந்தில் பாத்திரப் படைப்பு அற்புதம். வாழ்க்கையின் மேடு பள்ளங்களை அனுபவித்த விவேகம் ததும்பும் புன்முறுவல் முகம். கண்ணாடிக்கு பின்னே அவ்வப்போது விரியும் உணர்ச்சிகளை வெளிக்காட்டாத கண்கள். இப்படியாக அழியாத பிம்பமாய் ஆணியடித்து அமர்ந்து கொள்வது மாதிரி எல்லா பாத்திரங்களும் இருப்பது ஒரு ஆச்சரியம். பள்ளிக் கூடத்து தோழியாக வந்து போகும்போதும் சரி, நான்கைந்து பிள்ளைகளோடு குடும்ப பாரத்தின் கனமான ரேகைகளை முகத்தில் படர விட்டுக் கொண்டு சராசரி பெண்மணியாய வரும்போதும் சரி, கமலா கனக் கச்சிதம். &lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரையும் திருப்திப்படுத்தும் வகையில் ஒரு திரைப்படத்தை எடுப்பது என்பது கஷ்டமான காரியம் என்பதை திரையுலக பிரம்மாக்களுக்கே தெரிந்த விஷயம். பாலா, சேரன் என தொடரும் தமிழ் சினிமாவின் புது முகங்கள் அதை சாமர்த்தியமாக செய்து காட்டும்போது புருவங்கள் உயருகின்றன. ஆட்டோகிராப், எந்த காலத்திற்கும், எந்த வயதினருக்கும் பொருத்தமானது என்பதை சொல்லத் தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வணிக நோக்கம் என்கிற சேற்றுக்குள் புதையுண்டு கிடக்கும் தமிழ் சினிமாவை யதார்த்தம் என்கிற புனித நீர் கொண்டு சுத்தம் செய்து மனிதம் என்கிற மகத்தான ஆடையை அணிவித்து அரங்கத்திற்கு கொண்டு வர சேரன் போன்றவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு தமிழர்கள் தார்மீக ஆதரவை தந்து தோள் கொடுக்க வேண்டியது அவசியம். ஆட்டோகிராப் என்னும் ஆங்கில தலைப்பு நெருடலாக இருந்தாலும் இது போன்ற படங்கள் பார்க்கப்பட வேண்டியது மட்டுமல்லாமல் உணரப்பட வேண்டிய விஷயம் என்றே எனக்கு தோன்றுகிறது. அதே போல வறண்டு கிடக்கும் வயல்களும், வாய்க்கால்களையும் சின்ன வயது ஞாபகங்களாக காட்டும் சேரன், நிகழ்கால காட்சிகளாக காட்டுவது பசுமையும் வனப்பும் சூழ்ந்த பிரதேசங்கள். ஏனிந்த முரண்பாடு?  &lt;br /&gt;&lt;br /&gt;மனித உணர்வுகளில் அன்பின் குறியீடாகிய காதலுக்கு மட்ம் தனியிடம் உண்டு. அதன் அவஸ்தைகளில் கூட சுகமுண்டு. அதுவே வாழ்க்கையில்லை என்பதை உணர்த்த சேரன் போன்றவர்கள் இன்னொரு முறை புறப்பட்டு வந்து வெற்றிக் கீரிடத்தை மீண்டும் சுமப்பார்கள் என்கிற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. &lt;br /&gt;								&lt;br /&gt;	                                         - ஆதி&lt;br /&gt;                   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திரை விமர்சனம் - கில்லி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் புத்தாண்டு முதல் திரையிடப்படடிருக்கும் புதிய திரைப்படங்களில் கில்லியும் ஒன்று. இப்படத்திற்கான ட்ரெயிலரிலேயே ஆங்கிலப்படத்திற்;கு இணையான காட்சிகளையும் பின்னணியில் ஆங்கிலத்தில் காட்சிகளை விவரிக்கும் குரல் ஒன்றையும்ஒலிக்கச்செய்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர்; தரணி. நம் எதிர் பார்ப்பும் வீண் போகவில்லை. ஜாக்கிஜானின் ஆங்கில படமொன்றை ஓடவிட்டு, கணிணியின் துணைக்கொண்டு ஜாக்கிஜானுக்கு பதிலாக விஜயை திரைப்படத்தில் பொருத்தியிருப்பது போன்ற பிரமையை படம் முழுமைக்கும் உணர முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;விருப்பத்திற்கு மாறாக ஒரு பெண்ணை(நாயகியை) மணக்கத்துடிக்கும் அரசியல் பலம் படைபலம் நிரம்பிய ஒருவனிடமிருந்த நாயகன் நாயகியை காப்பாற்றி கைப்பிடிக்கும் என்ற ஒரு வரி...ஸாரி...அரை வரி கதை!&lt;br /&gt;&lt;br /&gt;அறுபதுகளிலிருந்து ஆரம்பித்து ஏகப்பட்ட திரைப்படங்கள் இக்கதையை மையமாக வைத்து வந்து விட்ட நிலையில் இந்த திரைப்படத்திற்கு கூட்டம் சேர்க்க அனிமேஷன் காட்சிகளும், தொழில்நுட்பம் வாய்ந்த காமிராவும் டி டி எஸ் சவுண்ட் சிஸ்டமும் உதவியிருக்கின்றன. கார் ரேஸ் போல் நாயகன், நாயகியை கார்கள்  துரத்த-துரத்த நாமே காரில் தப்பி செல்வது போன்ற உணர்வு ஆரம்பத்தில் தோன்றுகிறது. ஆனால் அதுவே சற்று நீளமாக போரடிக்க ஆரம்பிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வித்யாசாகரின் இசையில், இரண்டு பாடல்கள் நன்றாக வந்திருக்கின்றன. பின்னனி இசையில் இரைச்சல் காதை செவிடாக்குகிறது காது தொடர்ந்து நன்றாக கேட்க வேண்டுமே என்று நினைப்பவர்கள் கொஞ்சம் பஞ்சு கொண்டு போகவும்.&lt;br /&gt;&lt;br /&gt;திருட்டு வி.சி.டி, டீ.வி. இவற்றை மீறி ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்க தொழில் நுட்பத்தின் உதவியுடன் இயக்குனர் தரணி மெனக்கெட்டிருக்கிறார்  அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். விஜய் என்பதற்காகவோ என்னவோ,க்ளோசப் ஷாட்டில் கேமராவைப்பார்த்து தன் திரையுலக எதிரிகளுக்கு அடிக்கடி எச்சரிக்கை விடுக்கிறார்.சமயத்தில் நம்மைத்தான் எச்சரிக்கிறாரோ என்ற பயமும் நமக்கு ஏற்பட்டுவிடுகிறது. காசு கொடுத்து தியேட்டருக்கு சென்று இது போன்ற மிரட்டல்களை வேறு கேட்டு பயப்படவேண்டியிருக்கிறது. நம் நடிகர்கள் இதை எப்போது விடுவார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பிட வேண்டிய விஷயம் காமடிக்கென்று தனி டிராக் ஏதும் ஒதுக்காமலும் இரட்டைஅர்த்த வசனங்கள் இல்லாமலும் முதல் பாதி படத்தை ஓரளவுக்கு கலகலப்பாக்குகிறார் விஜய் பாராட்டுக்கள். காமிராவின் துரத்தல் வேகமும் பளீரிட வைக்கும் துல்லியமும் ஆச்சர்யம்தான்.&lt;br /&gt;	&lt;br /&gt;மொத்தத்தில் சாதாரண அரிசி உப்புமாவில் விதவிதமான சமையல் பொருட்கள் போட்டு, வாசனை ஏற்படுத்தி அற்புதமாக்க முயற்சித்துள்ளார் இயக்குநர் தரணி.&lt;br /&gt;						&lt;br /&gt;&lt;br /&gt;                                                    - ஆதி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6680909-108548845076380991?l=magarantham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6680909/posts/default/108548845076380991'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6680909/posts/default/108548845076380991'/><link rel='alternate' type='text/html' href='http://magarantham.blogspot.com/2004/05/blog-post_108548845076380991.html' title='கொத்தமல்லி இட்லியும் கொத்து புரோட்டாவும்!'/><author><name>மகரந்தம்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://img75.photobucket.com/albums/v228/magaranthampicts/magarantham.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6680909.post-10854879771560850</id><published>2004-05-25T17:05:00.000+05:30</published><updated>2004-05-25T17:56:17.156+05:30</updated><title type='text'>சாக்கடையான படித்துறை!</title><content type='html'>காலச்சுவடு  சனவரி- பிப்ரவரி- 2004 இதழின் ‘கதா’ சிறுகதை போட்டியில்  ‘ஆண்களின்  படித்துறை” என்ற சிறுகதை முதல்பரிசு பெற்றதாக அறிவிக்கப்பட்டு, கதை வெளியாகியுள்ளது. காலச்சுவடு இதழின் பாரம்பரியத்தையும் அதன் தனித்தன்மையையும் உணரந்திருந்ததால் கதை தேர்வு செய்யப்பட்ட விபரம் நவம்பர்-டிசம்பர்--2003 இதழில் வெளிவந்தவுடனே,ஆர்வ மேலீடு அதிகமாகியது. சனவரி-பிப்ரவரி-2004-ல் இதழ் வரப்பெற்றதும் மற்றைய செய்திகளை பின்னுக்கு தள்ளி முதலில் படித்தது ஜே.பி.சாணக்கியாவின்  ‘ஆண்களின் படித்துறை” சிறுகதையைத்தான்.&lt;br /&gt;	&lt;br /&gt;இச்சிறுகதையை படிக்க துவங்கியதும் ஏற்பட்ட அதிர்ச்சியும் தாக்கமும் கதையை படித்து முடித்த பின்னரும் அடங்கவில்லை (இக்கட்டுரை எழுதும் இந்த நாளிலும்; கூட). கதையின் பெரும்பகுதி புணர்தலை வர்ணித்து அனுபவித்து எழுதப்பட்டுள்ளது. இந்நடை பெரும்பாலரன வாசகர்களுக்கு சரோஜாதேவி ரகத்தை சேர்ந்த பத்திரிக்கைகளை நினைவுபடுத்தியிருப்பது காலச்சுவடின் மார்ச்-ஏப்ரல்-2004 வெளிவந்த வாசகர் கடிதங்களின் கோபக்கணைகளிலிருந்து  உணர முடிந்தது. இக்கதையை அனைவரும் ரசித்து விட வில்லை என்பதையும், என்னைப்போல் பலரையும் கோபப்படுத்திருப்பதையும், அறிந்து கொள்ள முடிந்ததில் ஓரளவுக்கு நிம்மதி.இந்நேர்வில்  இரண்டு நிகழ்வுகள் வன்மையாக கண்டிக்கப்படவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று:  &lt;br /&gt;	ஜே.பி. சாணக்கியா சிறுகதை எழுதுகிறேன் பேர்வழி என்று ஆபாசத்தை அள்ளித்தெளித்திருப்பது. இவர் காலச்சுவடு வாசர்களையும் சரோஜாதேவி வாசர்களையும் ஒன்றாக கருதுகிறாரா? பரபரப்பை ஏற்படுத்திதான் இவர் முன்னுக்கு வரவேண்டுமென்றால், புஷ்பாதங்கதுரை போன்று பாலியல் உணர்வுகளை துண்டுகிற கதைகளை புத்தகமாக வெளியிடலாம். நம் சமூகத்தில் இம்மாதிரியான புத்தகங்களுக்கும் வரவேற்பு  இருக்கிறது என்பதுதான் வேதனையான விஷயம்.  இதன் மூலம் ஜே.பி.சாணக்யா பரப்பரப்பாக அனைவராலும் பேசப்படலாம் தேவையான பொருளையும் ஈட்டலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு:&lt;br /&gt;	  காலச்சுவடு பெயருக்கேற்றவாறு நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கிற முக்கிய நிகழ்வுகளை சுவடுகளாக பதிவு செய்துகொண்டுவரும் தரமான இலக்கிய இதழ்--இதன் வெளியீட்டிலிருந்து இப்படி ஒரு கதை அதன் தீவிர சாதாரண வாசகர்களால் எதிர் நோக்கப்படவில்லை.&lt;br /&gt;	ஆடை அவிழ்ப்பையும், புணருதலையும் வகைவகையாக வருணிக்கும் இச்சிறுகதைக்கு கதா அமைப்பின் முதல் பரிசு வேறு. முதல் பரிசுக்கு இச்சிறுகதை எந்தெந்த அளவீடுகளின் படி தேர்வுசெய்யப்பட்டது  ‘காலச்சுவடு” கண்டிப்பாக விளக்கவேண்டும். வீட்டிலுள்ள தாய் தந்தை முதல் அனைவரும் படிக்கும் வகையில் உள்ள தரமான இதழ், கதா- காலச்சுவடு இப்படி ஒரு கதையை முதல் பரிசுக்கு தேர்வுசெய்தது, வணிக நோக்கமா? அல்லது வேறு காரணங்கள் உள்ளதா? பரபரப்பை ஏற்படுத்தாமலே இலக்கிய வாசகர் வட்டத்தை அடையக்கூடியதுதான் காலச்சுவடு. இது போன்ற தரங்கெட்ட நடத்தையினை குமுதம் போன்ற பத்திரிக்கைகளே நடத்தி வருகின்றன, காலச்சுவடிற்கு இது தேவையுமில்லை, அழகுமில்லை.&lt;br /&gt;	&lt;br /&gt;	இந்த இதழை எனது மனைவியிடமோ, மகனிடமோ, தாயிடமோ கொடுத்து படிக்கச்சொல்லமுடிய வில்லை என கண்ணீர் சிந்தியிருக்கிறார் சென்னை வாசகர் திரு. கே.ராமசுப்பிரமணியன். (காலச்சுவடு  - மே 1ஃ2004 மாத இதழில்.)&lt;br /&gt;&lt;br /&gt;	காலச்சுவடிற்க்கு ஒரு சூடு போதும் என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;								- ஆதி  &lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6680909-10854879771560850?l=magarantham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6680909/posts/default/10854879771560850'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6680909/posts/default/10854879771560850'/><link rel='alternate' type='text/html' href='http://magarantham.blogspot.com/2004/05/blog-post_25.html' title='சாக்கடையான படித்துறை!'/><author><name>மகரந்தம்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://img75.photobucket.com/albums/v228/magaranthampicts/magarantham.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6680909.post-108540599789171721</id><published>2004-05-24T19:07:00.000+05:30</published><updated>2004-05-24T19:09:57.890+05:30</updated><title type='text'>தலையங்கம்</title><content type='html'>அன்புடையீர், வணக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கிய வானில் நட்சத்திரங்களாக மின்னும் சிற்றிதழ்களை எண்ணி மாளாது. இலக்கிய மோகம் வெகுஜன பத்திரிக்கைகளையும் இன்று விட்டுவைக்கவில்லை என்பது வெளிப்படை. 'எழுதுகோல் தெய்வம்' என்றான் பாரதி. பாரதியின் வாக்கை மனதில் கொண்டு ஜந்தாண்டுகளுக்கு முன்பு இளம் படைப்பாளிகளை அறிமுகப்படுத்தும் தளமாக 'சுடர்' ஒளிவிட ஆரம்பித்தது. பெரிய அளவில் இலக்கியப் புரட்சியை துவக்கி வைப்பதற்காகவோ அல்லது ஜனரஞ்சம் என்ற பெயரில் தரத்தை தூக்கியெறிந்து விடும் சராசரி வெகுஜன இதழாகவோ இல்லாமல் ஓரளவு இலக்கிய தாகத்துடன் உலா வந்து கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கிய சிற்றிதழ்களுக்கே இடப்பட்ட சாபமான பொருளாதார நெருக்கடி சுடரையும் சுட்டுவிட்டது. அச்சு ஊடகத்தின் பொருளாதார கட்டாயங்களுக்கு முன்னால் ஆசிரியர் குழுவின் வைராக்கியம் நீர்த்துப் போய் சுடர் ஒளியிழந்தது. இணையத்தின் மூலம் தமிழின் எல்லை விரியத் துவங்கியிருக்கும் இக்காலகட்டத்தில் சுடருக்கு மீண்டும் ஒளியூட்டலாம் என்கிற நம்பிக்கை பிறந்தது; மகரந்தம் உருவானது. &lt;br /&gt;&lt;br /&gt;மகரந்தம், அள்ளினாலும் அளவில் குறையாத அமுத சுரபியாய் புதிய தலைமுறைக்கான ஆக்க வித்துக்களை தன்னுள்ளே அடக்கி, பிரபஞ்சத்தில் விரிந்து பரவியிருக்கும் தமிழ் இலக்கிய தேனீக்கள் நுகர காத்திருக்கிறது....மறுபடியும் கைவிடப்படமாட்டோம் என்கிற நம்பிக்கையுடன்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர் குழு.&lt;br /&gt;மகரந்தம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6680909-108540599789171721?l=magarantham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6680909/posts/default/108540599789171721'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6680909/posts/default/108540599789171721'/><link rel='alternate' type='text/html' href='http://magarantham.blogspot.com/2004/05/blog-post.html' title='&lt;strong&gt;தலையங்கம்&lt;/strong&gt;'/><author><name>மகரந்தம்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://img75.photobucket.com/albums/v228/magaranthampicts/magarantham.jpg'/></author></entry></feed>
